ஶ்ரீலங்கா அரசுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் ஶ்ரீலங்காவுடனான பிரித்தானிய உறவைக் கண்டித்தும் லண்டனிலுள்ள ஶ்ரீலங்கா தூதரகத்திற்கு முன்பாக புலம்பெயர் தமிழர்கள் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஶ்ரீலங்கா சுதந்திர தினத்தன்று லண்டனிலுள்ள ஶ்ரீலங்கா தூதரத்துக்கு முன்பாக புலம்பெயர்ந்த தமிழர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றும் பிரிகேடியர் பிரியங்கர பெர்ணான்டோ கழுத்தை அறுக்கும்
சைகையை காண்பித்திருந்தார் .![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgkB0ljMWrHeTMpg5I7Eufrs09En2eVkpro1LjRGQbTm5KbiV3eS0xmqI58tNwLaSCsLDG_yjSwEhdZonN1RQthcRhHQlufyxH26q-6Nm2xgRFws19kU8vTecftUq8IfZgCoh2O8KwJ2xC3/s1600/%255BUNSET%255D)
/
பிரிகேடியர் பிரியங்கரவிற்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படவேண்டும் அவரை உடனே நாடுகடத்த வேண்டும் எனக்கோரி இன்றைய தினம் தமிழர் ஒருங்கிணைப்பு குழு, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் உட்பட பத்து புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் கூட்டாக இணைந்து லண்டனில் பாரிய ஆர்ப்பாட்டத்தை நடத்தியமை குறிப்பிடத்தக்கது.![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhUsn4oua0XEdY9hE_mInRRhU4dYrp-TBUds6Mif-2n08R9hxlpw8dUebaKmIrHnfCJKuCDo5Xc0ABHo8twdtx-9oPZ2cWU1bzOc1KFOBnNzd5GPnss5UfZw2Gz4rAoY2PlYZm_xV3uLRec/s1600/%255BUNSET%255D)
No comments
Post a Comment