வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட அன்பான கணவரையும் உயிரான மகனையும் தேடி தேடி இறுதியாக உயிரிழந்த தாய்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட அன்பான கணவரையும், உயிரான மகனையும் தேடி 9 வருடங்கள் போராடியும் ஒருமுறையேனும் காணமுடியவில்லையே என்ற ஏக்கத்துடன் தனது உயிரை விட்ட தாய்
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் கொழும்பில் கடற்படையின் இரகசிய முகாமில் கண்டெடுக்கப்பட்ட 12 அடையாள அட்டைகள் தொடர்பான வழக்கு நடைபெற்று வருகிறது. அந்த வழக்கின் காணாமல் ஆக்கப்பட்ட மன்னாரைச் சேர்ந்த நபரின் தாய் ஜெசிந்தா பீரீஸ் அவர்கள் காலமாகிவிட்டார். அவரிற்கு மாரடைப்பு காரணமாக இறந்துள்ளார். கடந்த கிழமை வழக்கிற்கு வந்து சென்றார்.
அவர் அடுத்த தவனை வரமாட்டன் வழக்கை பாருங்கள் என்று கூறியது இன்னும் எமது காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இவர் தனது கணவனையும் மகனையும் தேடி தேடி கழைத்து நேற்று யாழ் வைத்தியசாலையில் மாரடைப்பால் இறந்து உள்ளார். இதற்கு எமது அரசியல் தலைமைகள் மற்றும் அரசியல் வாதிகள் தமிழ் மக்கள் பதில் சொல்ல வேண்டும். இப்படி இன்னும் பலர் உள்ளனர். எமது அம்மாவிற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்..
No comments
Post a Comment