Latest News

July 10, 2017

வடமராட்சியில் பதற்றம் – வீதிகளில் டயர்கள் கொழுத்தப்பட்டுள்ளன
by admin - 0


யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மணல்காட்டில் இளைஞர் ஒருவர்  காவல்துறையனரின் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டதனைத் தொடர்ந்து வடமராட்சியின் கலிகைச் சந்தி, துன்னாலை வேம்படிச் சந்தி ஆகியவற்றில் டயர்கள் கொழுத்தப்பட்டுள்ளதாகவும் அப்பகுதியில் பதற்றமான நிலை நிலவுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வேம்படிப் பகுதியைச் சேர்ந்த இளைஞரொருவர் காவல்துறையினரின்  துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதனைத்  தொடர்ந்தே பதற்றமான நிலை காணப்படுகிறது.

குறித்த பகுதிகளுக்குள் காவல்துறையினர் ; உட்செல்ல முடியாத நிலை காணப்படுகின்ற நிலை காணப்படுவதாகவும் காவல்துறையினர் உள்ளே   சென்றால் மோதல்நிலை உருவாகலாம்  எனவும்கருதப்படுகின்றது.

இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறை உத்தியோகத்தர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

« PREV
NEXT »

No comments