Latest News

June 06, 2017

மூன்று சிறுமிகள் துஷ்பிரயோக சம்பவம் சந்தேக நபர்கள் அணிவகுப்பில் அடையாளம் காணப்படவில்லை
by admin - 0

சந்தேக நபர்கள் அணிவகுப்பில்  அடையாளம் காணப்படவில்லை


திரு­கோ­ண­மலை மூதூர் பெரு­வெளி கிரா­மத்தில் மூன்று சிறு­மி­களை துஷ்­பி­ர­யோ­கத்­திற்கு உட்­ப­டுத்­திய சம்­பவம் தொடர்பில் கைது செய்­யப்­பட்ட சந்­தே­க­ந­பர்கள் நேற்று அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்பட்ட போதிலும் அவர்கள் அடையாளம் காட்டப்படவில்லை. 

இருந்த போதிலும் அவர்களை எதிர்வரும் 12 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிவான் ஐ.என்.ரிஸ்வான் உத்தரவிட் டுள்ளார்.

மூதூர் நீதிவான் நீதி­மன்­றத்தில் நேற்று காலை அடை­யாள அணி­வ­குப்பு நடை­பெற்றது. 

பாதிக்கப்பட்ட மூன்று சிறுமிக ளும் அடையாள அணிவகுப்பில் கலந்து கொண்டபோதிலும் அவர்கள் சந்தேக நபர் கள் எவரையும்  அடையாளம் காட்டவில்லை. 

இதனை அடுத்து சம்­பவம் தொடர்பில் கைது செய்­யப்­பட்ட ஐந்து சந்­தே­க­ந­பர்­க­ளையும் எதிர்­வரும் 12 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு நீதவான் ஐ.என். றிஸ்வான் உத்­த­ர­விட்­டுள்ளார்.

மூதூர் பெரு­வெளி பகு­தியில் கடந்த சில தினங்­க­ளுக்கு முன்னர் பாட­சாலை மாண­விகள் மூன்று பேரை குறித்த பகு­தியில் தொழில்­பு­ரிந்துக் கொண்­டி­ருந்த சிலர் துஷ்­பி­ர­யோ­கத்­தற்கு உட்­ப­டுத்­தி­ய­தாக தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

சம்­பவம் தொடர்பில் ஆரம்­பத்தில் நான்கு சந்­தே­க­ந­பர்கள் கைது செய்­யப்­பட்­டிருந்ததுடன் விசா­ர­ணை­களின் பின்னர் மற்­று­மொரு சந்­தே­க­ந­பரும் கைது செய்­யப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது.

இந்­நி­லையில் நேற்று அடை­யாள அணி­வ­குப்பு இடம்­பெற்­றது. சிறு­மிகள் சார்பில் நான்கு சட்­டத்­த­ர­ணிகள் மன்றில் ஆஜா­ரா­கி­யி­ருந்­தனர்.

சம்­பவம் தொடர்பில் மூதூர் பொலிஸார் விசா­ர­ணை­களை மேற்­கொண்டு வரு­கின்­றனர்.

இதே­வேளை நீதி­யான விசா­ர­ணை­ கோரி இரால்­குழி, மற்றும் மூதூர் மல்­லி­கைத்­தீ­வு­சந்தி போன்ற இடங்­களில் வேறு­வே­றாக கவன ஈர்ப்பு போராட்டத்தை பொதுமக்களும் மாணவர்களும் ஏற்பாடு செய்து நடாத்தியிருந்தனர். மல்லிகைத்தீவு சந்தியில் சில இளைஞர்கள் வீதிமறிப்பிலும் ஈடுபட்டதனால் சற்று குழப்பநிலைமை காணப்பட்டது.
« PREV
NEXT »

No comments