Latest News

April 22, 2017

மாயக்­கல்லி மலையில் விகாரை அமைப்­ப­தற்கு பௌத்த பிக்­குகள் மீண்டும் பெரும் முயற்சி
by admin - 0

முஸ்லிம் மக்கள் தடுத்­த­மையால் பெரும் பதற்றம்; கல­க­ம­டக்கும் பொலிஸார் குவிப்பு

அம்­பாறை, இறக்­காமம், மாணிக்­க­மடு மாயக்­கல்லி மலையை அண்­டிய பகு­தியில் தனியார் காணியை ஆக்­கி­ர­மித்து அங்கு பலாத்­கா­ர­மாக பௌத்த விகாரை ஒன்றை அமைப்­ப­தற்கு பௌத்த பிக்­குகள் சிலர் முற்­பட்­ட­தனால் அங்கு நேற்று வெள்­ளிக்­கி­ழமை இரண்­டா­வது நாளா­கவும் பெரும் பதற்­ற­நிலை ஏற்­பட்­டது. 

இதனால் அங்கு பொலிஸார் மற்றும் விசேட அதி­ரடிப் படை­யினர் பெரு­ம­ளவில் குவிக்­கப்­பட்டு பாது­காப்பு நட­வ­டிக்கை தீவி­ரப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. இறக்­காமம் பிர­தேச செய­லாளர் பிரி­வி­லுள்ள மாயக்­கல்லி மலையில் கடந்த சில மாதங்­க­ளுக்கு முன்னர் பௌத்த பிக்­குகள் பலாத்­கா­ர­மாக புத்தர் சிலை ஒன்று நிறு­வப்­பட்­டது. சிங்­க­ளவர் எவரும் வாழாத இப்­ப­கு­தியில் இச்­சிலை அமைக்­கப்­பட்­டமை தொடர்பில் பலத்த எதிர்ப்பு நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டும் அது அகற்­றப்­ப­ட­வில்லை. 

எனினும் அப்­ப­கு­தியில் பௌத்த விகாரை ஒன்றை அமைப்­ப­தற்­கான முயற்­சிகள் பிக்­குகள் குழு­வொன்­றினால் தொடர்ச்­சி­யாக முன்­னெ­டுக்­கப்­பட்டு வந்­த­துடன் இறக்­காமம் பிர­தேச செய­லா­ள­ரிடம் விகாரை அமைப்­ப­தற்­கான காணிக்­கு­ரிய அனு­ம­தியும் கோரப்­பட்­டி­ருந்­தது.

இந்­நி­லையில் நேற்று முன்­தினம் வியா­ழக்­கி­ழமை அங்கு முஸ்லிம் குடும்பம் ஒன்­றுக்கு சொந்­த­மான காணியில் அத்­து­மீறி விகாரை அமைப்­ப­தற்­கான ஏற்­பா­டுகள் பௌத்த பிக்­கு­க­ளினால் முன்­னெ­டுக்­கப்­பட்­ட­வேளை முஸ்லிம் மக்­களின் பலத்த எதிர்ப்பு கார­ண­மாக பொலிஸார் தலை­யிட்டு அதனை தடுத்து நிறுத்­தி­யி­ருந்­தனர்.

எவ்­வா­றா­யினும் நேற்று வெள்­ளிக்­கி­ழமை அம்­பா­றை­யி­லி­ருந்து பஸ்­ஸிலும் முச்­சக்­கர வண்­டி­க­ளிலும் வரு­கை­தந்த பௌத்த பிக்­குகள் தலை­மை­யி­லான குழு­வினர் குறித்த இடத்தில் மீண்டும் விகாரை அமைப்­ப­தற்­கான ஏற்­பா­டு­களை முன்­னெ­டுத்­தனர். இப்­ப­கு­தியில் அரச மரம் ஒன்­றினை நாட்டி விகா­ரைக்­கான அத்­தி­பா­ரத்தை வெட்டும் பணியில் இவர்கள் ஈடு­பட்­டனர். இத­னை­ய­டுத்து அங்கு முஸ்­லிம்கள் திரண்டு சென்று எதிர்ப்பு வெளி­யிட்­டனர். இதனால் முஸ்லிம் பொது­மக்­க­ளுக்கும் பௌத்த பிக்­கு­க­ளுக்கும் இடையில் வாய்த்­தர்க்கம் ஏற்­பட்­ட­துடன் முறுகல் நிலையும் தோன்­றி­யது.

இதனைத் தொடர்ந்து அங்கு மேல­திக பொலி­ஸாரும் விசேட அதி­ர­டிப்­ப­டை­யி­னரும் குவிக்­கப்­பட்­டனர். இத­னை­ய­டுத்து மாவட்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் எஸ்.குண­சே­கர சம்­பவ இடத்­திற்கு வரு­கை­தந்த போதும் நிலைமை சீர­டை­ய­வில்லை. இதனைத் தொடர்ந்து கிழக்கு மாகாண சுகா­தார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர், பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஐ.எம்.மன்சூர், மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளான ஆரிப் சம்­சுதீன், எம்.எஸ்.உது­மா­லெப்பை, டி.வீர­சிங்க ஆகியோர் வரு­கை­தந்து தனியார் காணி­களில் நிர்­மாணப் பணி­களை மேற்­கொள்ள வேண்டாம் என்று கேட்­டுக்­கொண்­டனர். ஆனாலும் பௌத்த பிக்­குகள் தலை­மை­யி­லான குழு­வினர் விகாரை அமைப்­ப­தற்­கான பணி­யினை மேற்­கொள்ள முயன்­றனர்.

 நிலைமை அறிந்த ஸ்தலத்­திற்கு வரு­கை­தந்த கிழக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் நுவன் வெத்­த­சிங்க மேல­திக பொலி­ஸாரைக் கொண்டு முறுகல் நிலையைத் தணித்­த­துடன் ஒரு­வார காலத்­திற்குள் நீதி­மன்றம் மூலம் தீர்க்­க­மான முடி­வினை பெற்­றுத்­தரும் வரை குறித்த பிர­தே­சத்­திற்குள் எவரும் உட்­பி­ர­வே­சிக்க வேண்டாம் எனக் கேட்­டுக்­கொண்டார். இத­னை­ய­டுத்து இரு தரப்­பி­னரும் பிரதிப் பொலிஸ் மா அதி­பரின் உத்­த­ர­வுக்கு அமைய மாயக்­கல்வி பிர­தே­சத்தை விட்டு வெளி­யே­றினர். இவர்கள் வெளி­யே­றிய போதிலும் இப்­பி­ர­தே­சத்தில் பாது­காப்பு பலப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­த­துடன் பல நூற்­றுக்­க­ணக்­கான பொலிஸார் இப்­ப­கு­தியில் கட­மையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தனர்.

பெளத்த பிக்­குகள் நேற்­று­முன்­தினம் வியா­ழக்­கி­ழமை தனியார் காணி­களில் விகா­ரையை அமைக்க முற்­பட்­ட­போது பதற்ற நிலை ஏற்பட்டிருந்தது. இதனையடுத்து இந்தக் காணி சொந்தக்காரர்களான பள்ளியான் ஜெயநுதீன், ஆதாம் லெவ்வை சமீமா ஆகியோர் தமண பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டை அடுத்தே பொலிஸார் நிர்மாணப் பணிகளை நிறுத்தியிருந்தனர். ஆனாலும் பௌத்த பிக்குகள் தலைமையிலான குழுவினர் நேற்று இரண்டாவது நாளாகவும் விகாரை அமைக்க முற்பட்டபோதே பெரும் பதற்றநிலை ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
« PREV
NEXT »

No comments