Latest News

March 21, 2017

எமது பிரச்­சி­னை­களை ஐ.நா.பாது­காப்பு சபைக்கு எடுத்­துச்­செல்­ல­ வேண்டும்
by admin - 0

ஐக்­கிய நாடுகள் மனித உரிமைகள் பேர­வையில் நிறை­வேற்­றப்­படும் தீர்­மா­னங்கள் அர­சாங்­கத்தை கட்­டுப்­ப­டுத்­தப்­போ­வ­தில்லை.

ஐ.நா. பாது­காப்பு சபை ஊடா­கவே அதனை செய்ய முடியும். எனவே எமது விட­யத்தை ஐ.நா. பாது­காப்பு சபைக்கு கொண்டு செல்லும் வழி­க­ளையே நாம் ஆராய்­கிறோம். அத­னைதான் நாங்கள் வலி­யு­றுத்­து­கி­னறோம் என்று தமிழ் தேசிய மக்கள் முன்­ன­ணியின் தலைவர் கஜேந்­திர குமார் பொன்­னம்­பலம் தெரி­வித்தார்.

அதனை தவிர்த்து வெறு­மனே கால அவ­கா­சத்தை வழங்­கிக்­கொண்டு அர­சாங்கம் செய்யும் செய்யும் என போலி நம்­பிக்­கையில் இருப்­பது பாதிக்­கப்­பட்ட மக்­களை ஏமாற்­று­வ­தாகும் என்றும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

ஜெனிவா மனித உரிமை பேர­வையின் 34 ஆவது கூட்டத் தொடரின் கலந்­து­கொண்­டுள்ள கஜேந்­திர குமார் பொன்­னம்­பலம் நேற்று ஜெனிவா வளா­கத்தில் கேச­ரிக்கு கருத்து வெ ளியி­டு­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்

அவர் அங்கு மேலும் குறிப்­பி­டு­கையில்

கடந்த 2015 ஆம் ஆண்டு ஜெனி­வாவில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­ன­மா­னது இலங்கை அர­சாங்­கத்­துடன் இணைந்தே கொண்­டு­வ­ரப்­பட்­டது. ஆனால் தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்ட காலத்­தி­லி­ருந்து அர­சாங்­கத்தின் முக்­கி­யஸ்­தர்­க­ளான ஜனா­தி­பதி பிர­தமர் மற்றும் நல்­லி­ணக்­கத்­துக்கு பொறுப்­பாண முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா ஆகியோர் பிரே­ர­ணையின் பொறுப்­பு­கூறல் சம்­பந்­த­மான விட­யங்­களை நிரா­க­ரித்து வரு­கின்­றனர்.

அது­மட்­டு­மன்றி அந்த பிரே­ர­ணையின் ஊடாக அர­சாங்­கத்­திக்கு வழங்­கப்­பட்ட பொறுப்­புகள் எதுவும் இது­வரை நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை. காணாமல் போனோர் அலு­வ­லகம் என்ற சட்­டத்தை மட்டும் கொண்­டு­வந்­துள்­ளனர் ஆனால் அதை இன்னும் நடை­மு­றைப்­ப­டுத்­த­வில்லை.

அந்த சட்­ட­மூலம் தொடர்­பா­கவும் விமர்­ச­னங்­களும் குறை­பா­டு­களும் உள்­ளன. அந்த அலு­வ­லகம் சுதந்­தி­ர­மாக இயங்க முடி­யாத நிலைமை காணப்­ப­டு­வ­தாக கூறப்­ப­டு­கின்­றது. இதை நாங்கள் கூற­வில்லை. மாறாக நிபு­ணத்­துவம் வாய்ந்­த­வர்கள் கூறு­கின்­றனர். அது­மட்­டு­மன்றி ஜெனீவா பிரே­ர­ணையில் உள்­ள­டக்­கப்­பட்­டுள்ள சர்­வ­தேச நீதி­ப­திகள் என்ற விட­யத்தை ஏற்­றுக்­கொள்­ள­போ­வ­தில்லை என அர­சாங்கம் தொடர்ச்­சி­யாக கூறி வரு­கின்­றது.

இவ்­வா­றான சூழலில் அர­சாங்­கத்­திற்கு இரண்டு வருட கால அவ­காசம் வழங்­கு­வ­தா­னது வெறு­மனே அர­சாங்­கத்­துக்கு அர­சியல் செய்­வ­தற்கு கால அவ­காசம் வழங்­கு­வதை போன்­ற­தாகும் அவ்­வாறே அதனை நாங்கள் பார்க்­கின்றோம். அர­சாங்­கத்­திற்கு உண்­மை­யி­லேயே செய்­வ­தற்கு விருப்பம் இருந்­தி­ருந்தால் அதி­லுள்ள கஷ்­டங்கள் தொடர்பில் ஒரு சில விட­யங்­களை கூறலாம் ஆனால் அர­சாங்க தரப்பின் வெ ளிப்­ப­டை­யா­கவே இதனை முடி­யாது என்று கூறு­கின்­றனர். எனவே இரண்டு வருட கால அவ­கா­சத்தை வழங்­கு­வ­தா­னது அர்த்­த­மற்­ற­தாகும்.

அடுத்­தாக கூட்­ட­மைப்பின் உறுப்­பி­னர்கள் ஒரு விட­யத்தை கூற முற்­ப­டு­கின்­றனர் அதா­வது இந்த தீர்­மானம் மட்­டுமே இருக்­கின்­றது என்றும் இதை விட்டால் வேறு எதுவும் இல்லை என்றும் கூற முற்­ப­டு­கின்­றனர் ஆனால் மாற்று வழிகள் உள்­ளன என்­ப­தையே நாங்கள் வலி­யு­றுத்­து­கின்றோம். அந்த மாற்று வழி­க­ளுக்கு நாம் செல்ல வேண்டும் அர­சாங்கம் விரும்பி எத­னையும் செய்­ய­போ­வ­தில்லை அது இன்று நிறூ­பிக்­கப்­பட்­டுள்­ளது.

அப்­ப­டி­யாயின் மனித உரிமை பேர­வையின் நிகழ்ச்சி நிரலை இந்த பிரே­ர­ணைக்கு மட்டும் முடக்கி வைப்­ப­தா­னது பொறுப்­ப­மற்­றது அதனால் எங்­க­ளுக்கு எதுவும் கிடைக்­க­போ­வ­தில்லை அது உறு­தி­யா­கி­விட்­டது. ஐக்­கிய நாடுகள் மனித உரி­வையில் நிறை­வேற்­றப்­படும் தீர்­மா­னங்கள் அர­சாங்­கத்தை கட்­டுப்­ப­டுத்­தாது பாது­காப்பு சபை ஊடா­கவே அதனை செய்ய முடியும் எனவே எமது விடயத்தை ஐ.நா பாதுகாப்பு சபைக்கு கொண்டு செல்லும் வழிகளையே நாம் ஆராய்கிறோம். அதனைதான் நாங்கள் வலியுறுத்துகினறோம் இந்த தீர்மானம் ஜெனீவாவில் இருக்கட்டும். அதில் பிரச்சினையில்லை ஆனால் வேறு வழிகளை நாம் தேடியாக வேண்டும்.

அதனை செய்யாமல் வெறுமனே கால அவகாசத்தை வழங்கிக்கொண்டு அரசாங்கம் செய்யும் செய்யும் என போலி நம்பிக்கையில் இருப்பது பாதிக்கப்பட்ட மக்களை ஏமாற்றுவதாகும் என்றார். 

« PREV
NEXT »

No comments