Latest News

March 07, 2017

புரட்சி பாடகர் சாந்தனுக்கு வீரவணக்கம்--- வீரத்தமிழர் முன்னணி ஐக்கியராச்சியம்
by admin - 0

இசையும் ஒருவித போராட்டவடிவமே என்பதையும்மனிதமனங்களை இலகுவாக அடையக் கூடிய கலைகளின் வழியே நமது போராட்ட நியாயங்களையும்மண் விடுதலையை தேவையினையும் மக்களிடம் கொண்டு செல்லமுடியும் என்று மனப்பூர்வமாக நம்பியவர் நமது தேசியத்தலைவர் அவர்கள்

 


அதன் காரணமாகவே போர்க்களத்தில் கவிஞர்களையும்பாடகர்களையும்  போரின் ஆயுதமாக வளர்த்துஇனவிடுதலை பாடல்களை வார்த்து எடுத்தவர்


அப்படி எமது தேசியத்தலைவரால் வளர்க்கப்பட்டுவார்க்கப்பட்ட எடுத்த ஒரு சொத்துதான் எங்கள் ஈழத்து புரட்சி பாடகர் சாந்தன் அவர்கள். ஈழத்தின் வலிகளையும் மாவீரர் பெருமைகளையும் களமாடிய கண்ணியங்களையும் கரிகாலன் செயற்பாடுகளையும் தேன்குரலில் உலகமெங்கும் கொண்டு சென்ற ஈழத்தின் இசைக்குயில் எங்கள் சாந்தன்அவர்கள்.


இத்தகைய பெருமைக்குரிய ஈழத்து புரட்சி பாடகர் எங்கள் சாந்தன் அவர்கள் தனது இரண்டு சிறுநீரகங்களும் வலுவிழந்த நிலையில் மாற்று அறுவைச் சிகிச்சைக்காக இரத்தத் தூய்மைசெய்து கொண்டுஅந்த நாளுக்காகக்காத்திருந்தவர். மாற்றுச் சிறுநீரகமும்பொருளாதாரமும்  ஆயத்தமான நிலையில் எதிர்பாராத விதமாக 26-02-2017 அன்று காலமானார்

அவரின்இறப்பு ஈடுசெய்ய இயலாத இழப்பு. கடந்த மாதத்தில் இதேபோன்றதொரு நாளொன்றில் வீரத்தமிழர் முன்னணி ஐக்கியராச்சியம் தனது நிதியுதவியாக ரூபாய் 2 லட்சம் அண்ணன் சாந்தனுக்கு அனுப்பி இருந்தது. அவருடைய அறுவை சிகிச்சைக்கு மேலும் பல உதவிகளை வீரத்தமிழர்முன்னணி ஐக்கிய ராச்சியம் செய்ய காத்திருந்த தருணத்தில் அவரின் இறப்பு செய்தி பேரிடியாக எமக்கு இருக்கிறதுஅண்ணன் சாந்தன் அவர்களை நம்பி இருக்கும்அவர்களின் பிள்ளைகளுக்கு தொடர் உதவிகளை வீரத்தமிழர் முன்னணிசெய்ய அணியமாக இருக்கிறது.

அவரை இழந்து வாடும் விடுதலை களத்தில்அவரின் நினைவுகளை சுமந்துகனவுகளை நோக்கி என்றும் வீரத்தமிழர் முன்னணி ஐக்கிய ராச்சியம் பயணிக்கும் என்பதை  இந்நேரத்தில் உறுதி கூறுகிறதுஅண்ணன் சாந்தன் அவர்களுக்கு  தனது வீரவணக்கத்தை வீரத்தமிழர் முன்னணிஐக்கியராச்சியம் செலுத்துகிறது.



புரட்சி பாடகர் சாந்தனுக்கு வீரவணக்கம்

வீரத்தமிழர் முன்னணி ஐக்கியராச்சியம் (ஒருங்கிணைப்பு குழு)

« PREV
NEXT »

No comments