Latest News

January 14, 2017

உடுவில் நாச்சிமார் சனசமூக நிலையத்தின் 16வது ஆண்டு விழாவும் பரிசளிப்பு விழா நிகழ்வுகளும்
by admin - 0

உடுவில் நாச்சிமார் சனசமூக நிலையத்தின் 16வது ஆண்டு விழாவும்  பரிசளிப்பு விழா நிகழ்வுகளும்   15.01.2017  ஞாயிற்றுக்கிழமை பி.ப 3.30 மணிக்கு சனசமூக நிலைய  மண்டபத்தில் த.துவாரகன் தலைமையில் இடம்பெறவுள்ளது

நிகழ்விற்கான பிரதம விருந்தினராக யாழ்.மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன்   சிறப்புவிருந்தினராக வலி.தெற்கு பிரதேச செயலளாளர் திருமதி மதுமதி வசந்தகுமார்,    வடக்கு மாகான பிரதி பொலிஸ்மா அதிபர் சன்ஸீவ தர்மரட்ன  கௌரவ விருந்தினராக வலி.தெற்கு பிரதேசசபை செயலாளர்தி.சுதர்சன்  , சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி முருகையா- செல்வக்குமார்  , ஜே 186 கிராமசேவையாளர் செல்வி தாரனி தேவமங்களநாதன்  , வலி.தெற்கு பிரதேச சபை சனசமூக நிலைய உத்தியோகத்தர் மலர்மகள் தயாபரன்   , N பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி சிவரூபா உமாசங்கர் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

 நிகழ்வில் ஆசியுரையினை நா.கனேசக்குருக்கள்  அருட்பணி இ.ராச்குமார் ஆகியோர் ஆற்றவுள்ளனர்.

கலை நிகழ்வுகளாக புத்தாக்க அரங்க இயக்க கலைஞர்களின் நடிப்பில் உயிர்ப்பு எனும் நாடகம்  , மயிலிட்டி வடக்கு கலை மன்னறம் வழங்கும் சிலம்பாட்டம்  , உடுவில் இந்து இளைஞர் மன்ற பாடசாலை மாணவர்கள் வழங்கும் ஒயிலாட்டம் ஆகியன இடம்பெறவுள்ளன. 
« PREV
NEXT »

No comments