தமிழர்கள் எதிர்பார்த்த தீர்வை 2016 பெற்றுத்தருவேன் என கூறிய எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தனக்கு தேவையான தீர்வை பெற்றுக்கொண்டுள்ளார் அதாவது ஒன்றரை வருட போராட்டத்தின் பின் உத்தியோகபூர்வ இல்லத்தை பெற்றுக்கொண்டுள்ளார்
காலஞ்சென்ற முன்னாள் ஶ்ரீலங்கா பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்கவுக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லமே தற்போது இரா.சம்பந்தனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஶ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய, ஆகியோரின் தலையீட்டிற்கிணங்க பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் ஊடாக இந்த வீடு, சம்பந்தனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
சம்பந்தன், எதிர்க்கட்சித் தலைவராக தெரிவு செய்யப்பட்டு ஒன்றரை வருடங்களாகிய பின்னரே, அவருக்கு உத்தியோகபூர்வ இல்லம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதுவே அவர் பெற்றுக்கொண்ட தீர்வாகும் .
No comments
Post a Comment