Latest News

November 07, 2016

சற்று முன் லண்டன் சிறை கைதிகள் கைகளில் வீழ்ந்தது HMP Bedford
by admin - 0

சற்று முன் லண்டன் சிறை கைதிகள் கைகளில் வீழ்ந்தது


 
சற்று முன்னர் பிரித்தானியாவில் உள்ள பெட்பேட்(HMP Bedford) நகரில் உள்ள மிகப்பெரிய சிறைச்சாலையின், ஒரு பிரிவை கைதிகள் கைப்பற்றியுள்ளதாக தெரியவருகிறது அங்கே காவலுக்கு நின்ற சிறைச்சாலை பொலிசாரை ஒரே நேரத்தில் சுமார் 200 கைதிகள் சேர்ந்து தாக்கியுள்ளார்கள். இதனால் தலைதெறிக்க ஓடிய காவலாளிகள் சிறையின் வெளி வாயிலை மட்டும் பூட்டியுள்ளார்கள். ஆனால் உள்ளே சிறைச்சாலையை கைதிகள் தமது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளார்கள். இச்சிறைச்சாலையின் ரூக்கோன் என்னும் பகுதி தற்போது முற்று முழுதாக கைதிகள் கைகளில் வீழ்ந்துள்ளது.

இது போன்ற நிலை ஏற்பட்டால் இதனை சமாளிக்க என சிறை அதிகாரிகள் உள்ளார்கள். அவர்களால் இதனை சமாளிக்க முடியாமல் போகவே தற்போது அவசர சேவைப் பிரிவு இவ்விடையத்தில் பொறுப்பை எடுத்துள்ளது. சுமார் 500 பேர் அடங்கிய கலகம் அடக்கும் பொலிசாட் ஒரே நடையாக உள்ளே சென்றால் தான் , சிறைச்சாலையை கைதிகளிடன் இருந்து மீட்டு மீண்டும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியும் என்று ஸ்கை செய்திச் சேவை சற்று முன்னர் அறிவித்துள்ளது. 

அதேவேளையில் உள்ளே இருந்து கைதிகள் தமது மோபைல் போனில் பல வீடியோகளை எடுத்து அப்லோட் செய்து வருகிறார்கள். இந்த வீடியோக்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது என்பதும் குறிப்பித்தக்க விடையம். தம்மை கைதிகள் போல  காவலாளிகள் நடத்தவில்லை என்றும். தம்மை துஷ்பிரயோகம் செய்தார்கள் என்றும். இதன் காரணத்தால் தான், தாம் இவ்வாறு செய்ததாகவும் கைதிகள் கூறுகிறார்கள்.
 
« PREV
NEXT »

No comments