கான்பூர்: பாட்னா -இந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் கான்பூர் அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் பலியானோர் எண்ணிக்கை 91 ஆக அதிகரித்துள்ளது.
கான்பூர் அருகே பொக்ரியான் என்ற இடத்தில் இந்த ரயில் இன்று அதிகாலையில் தடம் புரண்டது. அதிகாலை 5 மணிக்கு ஏற்பட்ட விபத்தில் ரயிலின் 14 பெட்டிகள் தடம் புரண்டன. தகவல் அறிந்து மீட்பு குழுக்கள், மருத்துவக் குழுக்கள் விரைந்து வந்தன.
விழுந்து கிடந்த ரயில் பெட்டிகளை அகற்றி அதற்குள் சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணி முடுக்கி விடப்பட்டது. இதுவரை 91 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக கான்பூர் ஐஜி ஜாகிர் அகமது கூறியுள்ளார்.
ரவிபத்துக்குள்ளான ரயில் பெட்டிகள் பல உருக்குலைந்து போய் விட்டன. ஒன்றின் மீது ஒன்றாக விழுந்து கிடப்பதால் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் பெரும் சிரமமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உதவி எண்கள்
விபத்து குறித்துத் தகவல் அறிய உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவை: ஜான்சி-05101072, ஓராய்-051621072, கான்பூர்- 05121072, பொக்ரயான்-05113-270239.
No comments
Post a Comment