Latest News

October 02, 2016

அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரையும் சென்னைக்கு வர சசிகலா உத்தரவிட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
by admin - 0


சென்னை: அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரையும் சென்னைக்கு வர சசிகலா உத்தரவிட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
எதற்காக எம்.எல்.ஏக்கள் சென்னைக்கு வரவழைக்கப்படுகின்றனர் என்ற விவரம் தெரியவில்லை.
முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் 11 நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார். அவரது வார்டுக்கு நேற்று பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் விஜயம் செய்து முதல்வர் உடல் நலம் குறித்து கேட்டறிந்தார்.

இந்த நிலையில் இன்று பிற்பகலுக்கு மேல் திடீரென அமைச்சர்கள் மருத்துவமனைக்கு வரவழைக்கப்பட்டனர். அதேபோல டிஜிபி ராஜேந்திரன், சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜும் மருத்துவமனைக்கு வந்தனர். அங்கு என்ன ஆலோசனைக் கூட்டம் நடந்தது என்பது தெரியவில்லை.
இந்த நிலையில் அதிமுக எம்.எல்.ஏக்களை உடனடியாக சென்னைக்கு வருமாறு முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா உத்தரவிட்டிருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அனைவரும் நாளைக்குள் சென்னை வர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. இது எதற்காக என்று தெரியவில்லை. ஏதேனும் கூட்டம் நடத்தப்படவுள்ளதா என்றும் தெரியவில்லை.
இதுகுறித்து அதிமுக வட்டாரத்திலிருந்து எந்த தகவலும் இல்லை.அதேசயம் உத்தரவு போயிருப்பது உண்மைதான் என்று அதிமுக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
« PREV
NEXT »

No comments