Latest News

October 22, 2016

மேயர் ஜொனியின் தந்தை வழக்கம்பரையில் ஆதரவற்ற நிலையில்
by admin - 0

நட்சத்திர ஐயர் என அழைக்கப்படும் இவர் மாவீரன் ஜோனி அவர்களின் தந்தை என அறியப்படுகின்றது .

 

உலகத்தலைவர்களின் நட்சத்திரங்களையும் அவர்களின் பலன்களையும் கிரமமாக சொல்லும் இவர் ,சிறந்த ,தமிழ் பண்பாட்டு அறிவும் ,சமய அறிவும் ஆங்கில ,சம்ஸ்கிருத புலமையும் கொண்டவர் .

இவர் தனது பிள்ளைகள் இருவரையும் நாட்டுக்காக விதைத்தவர் ,இவரின் தற்போதைய நிலைமை ஒரு நேர உணவுக்கே யாசகம் கேட்பதாக இருக்கிறது .

இவரின் இந்த நிலைமைக்கு காரணமே இராணுவத்தினரின் சித்திரவதை என்றும் அறியப்படுகின்றது .

தனது பிள்ளைகளை நாட்டுக்காக அர்ப்பணித்த இந்த பெருந்தகை யுத்தத்திற்கு முன்னர் கிளிநொச்சி பகுதியில் பூசகராக இருந்தவர் .அந்த வேளையில் புலிகள் இவரை நன்றாக கவனித்தார்கள் என்பதனையும் இங்கே குறிப்பிடுகின்றோம்.

இப்போது இந்த வயோதிபரை பராமரிக்க யாரும் அற்று இவர் வீதிகளிலும் இவரது மனைவியார் நல்லூரில் உறவினர்களின் வீடுகளிலும் தவிக்கின்றனர் .

« PREV
NEXT »

No comments