Latest News

September 13, 2016

கன்னடர்களுக்கு கருணை காட்டி எடுத்துக்காட்டான தமிழர்கள்
by admin - 0

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் வந்த கன்னட பக்தர்களுக்கு பூரண கும்ப மரியாதை அளித்து கவுரவம் அளிக்கப்பட்டது.



காவிரி விவகாரத்தில், பெங்களூருவில் சந்தோஷ் என்ற இளைஞர் தாக்கப்பட்டதை தொடர்ந்து, தமிழகத்திலும் இது எதிரொலித்தது. ராமேஸ்வரத்தில், கர்நாடகாவை சேர்ந்த வேன் டிரைவரை தமிழ் அமைப்பை சேர்ந்தவர்கள் தாக்கினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து கர்நாடகாவில் நேற்று பயங்கர கலவரம் வெடித்துள்ளது

இந்நிலையில், காவிரி பிரச்சனையில் இரு மாநிலங்களிலும் நிலவும் வன்முறை மற்றும் அசாதாரண சூழலை மாற்றி அமைதி ஏற்படுத்தும் வகையில் ராமேஸ்வரம் வந்த கர்நாடக பக்தர்களை பூரணகும்ப மரியாதை கொடுத்து ராமேஸ்வரம் இந்து மக்கள் கட்சியினர் கோவிலுக்கு அழைத்துச்சென்று சுவாமி தரிசனம் செய்துவைத்து பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர்.

இந்த வரவேற்பை கண்டு கன்னட பக்தர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். நன்றியும் தெரிவித்து கொண்டனர்.

இதிலிருந்து தமிழர்கள் அன்பு காட்ட தெரிந்தவர்கள் என்பதை கூறும் அதே வேளை தமிழர் மீது தாக்குதல் தொடர்ந்தால் தமிழன்???
« PREV
NEXT »

No comments