திருகோணமலை ஹைமாவதி வைத்தியசாலை அனுராதபுர சந்தியில் ஏப்ரல் மாதம் 2016 இல் தொடங்கப்பட்டது.
இதன் பிரதான நோக்கம் திருகோணமலை மக்களுக்கு சிறந்த, தரமான, நவீன மருத்துவ வசதிகளை நியாயமான விலையில் வழங்குவது.
தற்போது இங்கு 18 விசேட மருத்துவர்கள் இங்கு வருகைதருகின்றனர். திருமலையில் முதன் முதலாக 4 D தொழில்நுட்பத்துடன் படவியல் மற்றும் கர்ப்பிணிமார்களின் கலர் படங்களை பார்வையிடும் வசதி இங்கு உள்ளது .
இங்கு முழுநேர OPD வசதியை காலை முதல் இரவு வரை பெற்றுக்கொள்ளலாம். இரத்தம் மற்றும் சிறுநீர் சோதனைகளை இங்கு உடனடியாக பெற்றுக்கொள்ளலாம்.
ஹைமாவதி என்பது தமிழ் கடவுளின் பெயர். இந்த வைத்தியசாலையின் பொறுப்பாளர் சசிகரன் லட்சுமணன் திருகோணமலையை பிறப்பிடமாக கொண்டவர்.
இவர் பொறியியல் துறையில் முதல் பட்டம் பெற்று அனர் முகாமைத்துவ நிபுணத்துவம் மற்றும் தொழில் சார் வணிகத்தில் அதி விசேட பட்டம் பெற்றவர். இவர் இ. கி . ச. ஸ்ரீ கோணேஸ்வர இந்து கல்லூரியின் பழைய மாணவரும் பல சமூக சார் திட்டங்களை வெளிநாடுகளில் நடைமுறை படுத்தியவருமாவார்.
No comments
Post a Comment