Latest News

September 26, 2016

தியாக தீபம் திலீபனுக்கு மன்னாரில் இரு இடங்களில் அஞ்சலி
by admin - 0

தியாக தீபம் திலீபனுக்கு மன்னாரில் இரு இடங்களில் அஞ்சலி
 
      
 
தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமைக்காக 1987ஆம் ஆண்டு அகிம்சை வழியில் போராடித் தன்னுயிரை ஆகுதியாக்கிய தியாகி திலீபனின் 29 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வுகள் இன்று (திங்கட்கிழமை) மாலை மன்னாரில் இடம்பெற்றது.


 
மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அவ் அமைப்பின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் குறித்த நினைவஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.

மாலை 5.30 மணியளவில் இடம்பெற்ற குறித்த அஞ்சலி நிகழ்வின் போது சுடர் ஏற்றி இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதோடு தியாகி திலீபனின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

குறித்த நிகழ்வில் அருட்தந்தை ஜெகதாஸ், மன்னார் நகர சபையின் முன்னாள் உறுப்பினார் எஸ்.ஆர்.குமரோஸ், மன்னார் சமாதாக அமைப்பின் தலைவர் அந்தோனி மார்க், சமூக சேவையாளர் சிந்தாத்துறை, பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள், சமூக ஆர்வலர்கள் என பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.


 

இதேவேளை, தியாகி திலீபனின் 29 ஆவது ஆண்டு நினைவு தினத்தை வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் இன்று மாலை 6.15 மணியளவில் தனது குடும்பத்துடன் நினைவு கூறினார்.
 
« PREV
NEXT »

No comments