லண்டனில் உள்ள Russell Square என்ற பகுதியில் நேற்று முன் தினம் இரவு வாலிபர் ஒருவர் கத்தியால் கூட்டத்தினரை நோக்கி சரமாரியாக தாக்கியுள்ளான்.
இந்த சம்பவத்தில் பெண் ஒருவர் பலியானதுடன் ஐவர் படுகாயம் அடைந்தனர்.
பிரித்தானியாவை அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவம் தொடர்பான கூடுதல் விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
லண்டன் பள்ளியில் பயின்று வரும் Zakaria Bulhan(19) என்ற வாலிபர் தான் இந்த தாக்குதலை நிகழ்த்தியுள்ளார்.
இச்சம்பத்தில் பலியாகியுள்ள Darlene Horton(64) என்ற பெண் அமெரிக்காவில் உள்ள புளோரிடா நகரை சேர்ந்தவர் என்றும் பிரித்தானியாவில் கணவருடன் சுற்றுலா சென்றுருந்தபோது கொல்லப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.
மேலும், தாக்குதல் நிகழ்ந்தபோது வாலிபர் தான் இக்கட்டான சூழலில் இருப்பதாக தவறாக எண்ணிய Yovel Lewkowki(18) என்ற இளம்பெண் வாலிபரை காப்பாற்ற சென்றபோது அவரையும் வாலிபர் கத்தியால் தாக்கியுள்ளார்.
தாக்குதலை நிகழ்த்தியவர் சோமாலியா நாட்டில் பிறந்து நோர்வே குடியுரிமை பெற்றவன். மேலும், பிரித்தானியாவிற்கு கடந்த 2002ம் ஆண்டு படிப்பதற்காக சென்றுள்ளார்.
இந்த தாக்குதல் குறித்து வாலிபரின் பள்ளி நண்பர்களிடம் பொலிசார் விசாரணை நடத்தியபோது, ‘எங்களுடன் படிக்கும் அந்த மாணவர் மிகவும் கூச்ச சுபாவம் உள்ளவர். அவரை அடிக்கடி சக மாணவர்கள் கிண்டல் செய்வார்கள்.
மேலும், அவர் எப்போதும் மனநலன் பாதிக்கப்பட்டது போன்று காணப்படுவார்’ என பொலிசாரிடம் தெரிவித்துள்ளனர்.
லண்டன் நகரில் நிகழ்ந்த இந்த தாக்குதல் தொடர்பாக கூடுதல் விவரங்களை பொலிசார் சேகரித்து வருகின்றனர்.
No comments
Post a Comment