Latest News

August 04, 2016

ரியோ நகருக்கு வந்த ஜோதி... வீரர்கள் ஆரவாரம் : விழாக்கோலம் பூண்டது ஒலிம்பிக் கிராமம்
by admin - 0

ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ள ரியோ டி ஜெனிரோ நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. நாளை போட்டிகள் தொடங்க உள்ள தொடக்க விழா ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில் போட்டிக்கான ஒலிம்பிக் ஜோதி பல்வேறு நாடுகள் வழியாக ரியோ டி ஜெனிரோ வந்தடைந்தது.ஒலிம்பிக் ஜோதியை கண்டதும் விளையாட்டு வீரர்களும் ரசிகர்களும் ஆரவாரக் குரல் எழுப்பினர் 31வது ஒலிம்பிக் போட்டி பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நாளை கோலாகலமாக துவங்க உள்ளது. 

வரும் 21ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த சர்வதேச விளையாட்டு திருவிழாவில் பங்கேற்பதற்காக 207 நாடுகளில் இருந்து, 11,000க்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ரியோ நகரில் கூடியுள்ளனர். பிரேசிலின் இரண்டாவது மிகப் பெரிய நகரான ரியோ டி ஜெனிரோவில், நாளை 31வது ஒலிம்பிக் போட்டி தொடங்க உள்ளது. தென்னமெரிக்க மண்ணை ஒலிம்பிக் போட்டி மிதிப்பது இதுதான் முதன்முறை.

\
« PREV
NEXT »

No comments