Latest News

June 21, 2016

அனல் பறந்த ஆட்டத்தில் போராடி வென்றது சென்.அன்ரனீஸ்!
by admin - 0

அனல் பறந்த ஆட்டத்தில் போராடி வென்றது சென்.அன்ரனீஸ்!

வடமாகாண வல்லவன் உதைபந்தாட்ட தொடரில் 21.06.2016 அன்று பலம் வாய்ந்த அணிகள் மோதிய போட்டியாக இடம்பெற்ற போட்டியில் பாசையூர் சென்.அன்ரனீஸ் வி.க எதிர்த்து கிளிநொச்சி சென்.மேரிஸ் வி.க மோதியது. ஆட்டத்தின் 5 ஆவது நிமிடத்தில் சென்.அன்ரனீஸ் முதலாவது கோலினை பதிய பதிலுக்கு 19 ஆவது நிமிடத்தில் சென்.மேரிஸ் கனிகைராஜா கோலினை போட்டு சமப்படுத்தினார். 

முதற்பாதி ஆட்டம் 1:1 என சமநிலையில் முடிவடைய இரண்டாம் பாதி ஆட்டத்தின் 54 ஆவது நிமிடத்தில் டேமியன் கோல் காப்பாளருக்கு மேலால் தூக்கிபோட்டு கோலினை அடிக்க 2:1 என சென்.மேரிஸ் முன்னிலை பெற்றது. மிகுதி நேர ஆட்டத்தில் கோலினை அடிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்ட சென்.அன்ரனீஸ், கலிஸ்ரரின் மூலமாக 75 ஆவது நிமிடத்தில் இரண்டாவது கோலினை பதிவு செய்ததன் மூலம் சமன் செய்தது. 

தொடர்ந்தும் 77 ஆவது நிமிடத்தில் பேற்று பிரதேசத்திற்கு சற்று வெளியே கிடைக்கப்பெற்ற சுயாதீன உதையினை சென்.அன்ரனீஸ் கலிஸ்ரர் கோல் கம்ப மூலைக்கு உதைந்து அட்டகாசமான கோலாக மாற்றி ரசிகர்களை ஆரவாரப்படுத்தி 3:2 என முன்னிலை பெற்றது. தொடர்ந்த நிமிடஙாகளில் கோலினை பெற சென்.மேரிஸ் கடுமையாக முயற்சித்த போது பேற்று பிரதேசத்திற்கு சற்று வெளியே கிடைத்த சுயாதீன உதையினை கோல் கம்பத்திற்கு மேலால் அடித்து தவறவிட்டனர். 

ஆட்ட நேரத்திற்கு இரண்டு நிமிடங்கள் எஞ்சியிருக்கையில் சென்.அன்ரனீஸ் அஜித்குமார் மேலும் ஒரு கோலினை அடிக்க ஆட்ட நேர முடிவில் 4:2 என பாசையூர் சென்.அன்ரனீஸ் வெற்றி பெற்றது. 

போட்டியின் ஆட்ட நாயகனாக சென்.அன்ரனீஸ் வீரர் கலிஸ்ரர் தெரிவு செய்யப்பட்டு அவரிற்கான பண பரிசு மற்றும் பதக்கத்தினை ஹச் பிராந்திய முகாமையாளர் வி.கவிச்செல்வன் அவர்கள் வழங்கி கெளரவித்தார்.
« PREV
NEXT »

No comments