தனித் தமிழீழ நிலைப்பாட்டை விட்டு தாம் நகர்ந்துவிட்டதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
தனித் தமிழீழமே தமிழ் மக்களின் பிரச்சினைக்கு இருக்கும் ஒரே தீர்வு என்ற நிலைப்பாட்டை வலியுறுத்திய வட்டுக்கோட்டை தீர்மானத்தைவிட்டு விலகிவிட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து நேற்றுமுன்தினம் இந்தியாவின் மத்தியபிரதேச மாநிலம் உஜ்ஜைனில் நடைபெற்ற கும்பமேளா நிகழ்வில் கலந்துகொண்டிருந்த
இரா.சம்பந்தன்
இந்திய பத்திரிகையான த இந்துவுக்கு வழங்கிய நேர்காணலிலேயே இவ்வாறு தெரிவித்திருக்கின்றார்.
இந்தியாவுக்கு விஜயம் செய்திருந்த எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி,ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோர் பங்கேற்றிருந்த கும்பமேளா நிகழ்வில் பங்கேற்றிருந்தார்.
இந்த நிகழ்வையடுத்து இந்திய தலைவர்களையும் சந்தித்து சம்பந்தன் எம்.பி. கலந்துரையாடியிருந்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் உட்பட பெரும்பாலான தமிழ் கட்சிகள் பிரிக்கப்படாத இலங்கைக்குள் தீர்வு காணப்பட வேண்டும் என்ற இணக்கப்பட்டிற்கு வந்துள்ளன.
அத்துடன், தற்போது இலங்கையில் புதிய அரசியல் சாசனமொன்றை தயாரிக்கும் பணிகள் இடம்பெறுகின்றது. இதன்போது தமிழ் மக்களின் தேசியப் பிரச்சனையான இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான திட்டங்களும் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
இதேவேளை, தமிழ் மக்களின் தன்னாட்சி அதிகாரத்தை உறுதிப்படுத்தும் வகையில் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 40 ஆவது வருட தினம் நேற்று முன்தினமாகும். அன்றைய தினமே இந்த செவ்வியினை சம்பந்தன் எம்.பி. வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
No comments
Post a Comment