Latest News

May 03, 2016

ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்த வேண்டும்
by admin - 0

சர்­வ­தேச பத்­தி­ரிகை சுதந்­திர தினம் இன்று மே மாதம் 3ஆம் திகதி செவ்­வாய்க்­கி­ழமை கொண்­டா­டப்­ப­டு­கின்­றது. பத்­தி­ரிகை நிறு­வ­னங்கள் அல்­லது ஊடக நிறு­வ­னங்கள் செய்­தி­களை, கருத்­துக்­களை சுதந்­தி­ர­மாக எவ்­வித அச்­சு­றுத்­தல்­களும் தடை­க­ளு­மின்றி மக்­க­ளுக்கு வெளி­யி­டு­வதை பத்­தி­ரிகை சுதந்­திரம் என்று நாம் வரை­வி­லக்­க­ணப்­ப­டுத்த முடியும். அதா­வது உலகில் இடம்­பெறும் அர­சியல், பொரு­ளா­தார மாற்­றங்கள், குற்­றச்­செ­யல்கள், சமூக விட­யங்கள், பாது­காப்பு விவ­கா­ரங்கள், மனித உரி­மைகள் உள்­ளிட்ட பல்­வேறு துறைகள் சார்ந்த செய்­தி­களை வெளி­யி­டு­வ­தற்கு ஊடக நிறு­வ­னங்­க­ளுக்கு இருக்­க­வேண்­டிய சுதந்­தி­ரமே இந்த சர்­வ­தேச ஊடக சுதந்­திர தினத்தில் வலி­யு­றுத்­தப்­ப­டு­கி­றது.

இந்­நி­லையில் ஊடக சுதந்­தி­ரத்தைப் பொறுத்­த­வ­ரையில் எமது நாட்டு நிலை­மை­களை ஆரா­ய­வேண்­டி­யது இங்கு அவ­சி­ய­மா­ன­தாகும். ஊடக சுதந்­திரம் எனும் போது உலக நாடு­களின் வரி­சையில் இலங்கை 141 ஆவது இடத்தைப் பிடித்­துள்­ளது. ஐக்­கிய நாடுகள் சபையில் 192 நாடுகள் அங்கம் வகிக்­கின்ற நிலையில் அவற்றில் இலங்­கை­யா­னது ஊடக சுதந்­திரம் என்ற பிரிவில் 141 ஆவது இடத்தில் இருக்­கின்­றமை முன்­னேற்­ற­மற்ற நிலை­மை­யையே எடுத்­துக்­காட்­டு­கின்­றது.

ஒரு ஊட­க­வி­யலாளர் பல்­வேறு தடை­க­ளையும் அச்­சு­றுத்­தல்­களையும் துன்ப துய­ரங்­க­ளையும் எதிர்­கொண்­ட­வண்­ணமே சமூக நலனைக் கருத்தில் கொண்டு ஊட­கப்­ப­ணியில் ஈடு­பட்டு வரு­கின்றார். எமது நாட்டைப் பொறுத்­த­வ­ரையில் அவ்­வாறு பாரிய சவால்­க­ளுக்கு மத்­தியில் சமூ­கத்­திற்­காக சேவை­யாற்றும் ஊட­க­விய­லா­ளர்கள் கடந்த காலங்­களில் விசே­ட­மாக யுத்­த­கா­ல­கட்­டத்தில் எதிர்­கொண்ட அச்­சு­றுத்­தல்கள் ஏரா­ள­மா­ன­வையாகும். அது­மட்­டு­மன்றி பல ஊட­க­வி­ய­லா­ளர்கள் கடத்­தப்­பட்­டமை மற்றும் கொலை செய்­யப்­பட்­டமை உள்­ளிட்ட பல்­வேறு துன்­ப­க­ர­மான நிகழ்­வுகள் கடந்த காலங்­களில் இலங்­கையில் பதி­வா­கி­யி­ருந்­தன. எமது நாட்டில் கடந்த 17 வருட­கா­லத்தில் பெருமளவு ஊட­க­வி­ய­லா­ளர்கள் கொல்­லப்­பட்­டுள்­ள­தாக பதி­வுகள் கூறு­கின்­றன.

விசே­ட­மாக தமிழ் ஊட­க­வி­ய­லா­ளர்­களைப் பொறுத்­த­வ­ரையில் தராக்கி என பிர­ப­ல­மாக அறி­யப்­பட்ட சிவராம், ஐயாத்­துரை நடேசன், செல்­வ­ராஜா ரஜி­வர்மன், சுப்­பி­ர­ம­ணியம் சுகிர்­த­ராஜன், பரணி ரூப­சிங்கம் தேவ­குமார், நிம­ல­ராஜன், ரேலங்கி செல்­வ­ராஜா உள்­ளிட்ட பல ஊட­க­வி­ய­லா­ளர்கள் கொல்­லப்­பட்­டனர். அது­மட்­டு­மன்றி 2008 ஆம் ஆண்டு முழு உல­கையே அதிர்ச்­சிக்­குட்­ப­டுத்­தி­ய­வ­கையில் சண்டே லீடர் பத்­தி­ரி­கையின் முன்னாள் ஆசி­ரியர் லசந்த விக்­கி­ர­ம­துங்க இனந்­தெ­ரி­யாத துப்­பாக்­கி­தா­ரி­க­ளினால் சுட்­டுக்­கொல்­லப்­பட்டார். 1990 ஆம் ஆண்டு ஊட­க­வி­ய­லாளர் ரிச்சட் டீ சொய்சா சித்­தி­ர­வ­தைக்கு உட்­ப­டுத்­தப்­பட்டு கொல்­லப்­பட்­டி­ருந்தார். அத்­துடன் பல ஊட­க­வி­ய­லா­ளர்கள் கடத்­தப்­பட்டு காணாமல் போயினர். ஒரு சில ஊட­க­வி­ய­லா­ளர்கள் கடத்­தப்­பட்டு பின்னர் கடும் அச்­சு­றுத்­தல்­க­ளுக்கு மத்­தியில் விடு­விக்­கப்­பட்­டி­ருந்­தனர். கருத்­துப்­பட ஓவி­ய­ராக கட­மை­யாற்­றிய ஊட­க­வி­ய­லாளர் பிரகீத் எக்­னெ­லி­கொட 2010 ஆம் ஆண்டு காணா­மல்­போன நிலையில் அவ­ருக்கு என்ன நடந்­தது என்­பது தொடர்பில் இது­வரை எந்த தக­வலும் இல்­லாமல் இருக்­கின்­றது. ஊட­க­வி­ய­லா­ளர்கள் மட்­டு­மன்றி ஊடக பணி­யா­ளர்­களும் ஊடக நிறு­வ­னங்­களில் பணி­பு­ரிந்த உத்­தி­யோ­கத்­தர்­களும் இனந்­தெ­ரி­யா­தோரின் தாக்­கு­தல்­க­ளுக்கு பலி­யா­கிய மற்றும் காய­ம­டைந்த சம்­ப­வங்­களும் இலங்­கையில் இடம்­பெற்­றுள்­ளன. அத்­துடன் இனந்­தெ­ரி­யா­த­வர்­க­ளினால் பல ஊட­க­வி­ய­லா­ளர்கள் தாக்­கு­த­லுக்­குள்­ளான சம்­ப­வங்­களும் பதி­வா­கி­யி­ருந்­தன. பல ஊடக நிறு­வ­னங்­களும் இனந்­தெ­ரி­யா­தோரின் தாக்­கு­த­லுக்கு கடந்த காலங்­களில் உட்­பட்­டன. குறிப்­பாக கொழும்பில் இலத்­தி­ர­னியல் ஊட­க­மொன்று 2008 ஆம் ஆண்டு தீ வைத்து கொளுத்தப்­பட்­டது. அது­மட்­டு­மன்றி யாழ்ப்­பா­ணத்தில் பிராந்­திய பத்­தி­ரி­கை­யொன்று 13 தட­வைகள் இனந்­தெரி­யா­தோரின் தாக்­கு­தல்­க­ளுக்கு உள்­ளா­கி­யுள்­ளது.

இவ்­வாறு இலங்­கையைப் பொறுத்­த­வரையில் ஊட­க­வி­ய­லாளர் பணி என்­பது பாரிய சவா­லுக்­குட்­பட்­ட­தா­கவே காணப்­ப­டு­கின்­றது. குறிப்­பாக முப்­பது வருட யுத்­த­காலத்தில் ஊட­க­வி­ய­லா­ளர்கள் எதிர்­கொண்ட துன்ப, துய­ரங்கள் மற்றும் அச்­சு­றுத்­தல்கள், இடை­யூ­றுகள் என்­பன வார்த்­தை­க­ளினால் விப­ரிக்க முடி­யா­த­வை­யாகும். அந்­த­ள­விற்கு அச்­சு­றுத்­தல்­க­ளையும் சவால்­க­ளையும் எதிர்­கொண்ட வண்­ணமே ஊட­க­வி­ய­லா­ளர்கள் தமது பணி­களை முன்­னெ­டுத்து வந்­துள்­ளனர். கடந்த காலங்­களில் குறிப்­பாக தமிழ், ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு நிகழ்ந்த கொடூ­ரங்­க­ளையும், அச்சு­றுத்­தல்­க­ளையும், பட்­டி­ய­லிட்­டுக்­கொண்டே போகலாம். அந்­த­ள­விற்கு சவால்­மிக்­க­தா­கவே ஊட­க­வி­ய­லா­ளர்­களின் பணி காணப்­ப­டு­கின்­றது.

இது இவ்­வா­றி­ருக்க, கடந்த காலங்­களில் கொல்­லப்­பட்ட மற்றும் தாக்­கு­த­லுக்­குள்­ளான ஊட­க­வி­ய­லா­ளர்கள் தொடர்­பான விசா­ர­ணைகள் எதுவும் இது­வரை முழு­மை­பெற்­ற­தாக தெரி­ய­வில்லை. குறிப்­பாக லசந்த விக்­கி­ர­ம­துங்­கவை கொலை செய்த குற்­ற­வா­ளிகள், மற்றும் சிவராம், ஜி. நடேசன், சுகிர்­த­ராஜன் உள்­ளிட்­டோரை கொலை செய்­த­வர்கள் இது­வரை சட்­டத்தின் பிடியினால் தண்டிக்கப்­ப­ட­வில்லை. விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தாக அர­சாங்கம் கூறி­வந்­தாலும் அவற்றில் முன்­னேற்­ற­மி­ருப்­ப­தாக தெரி­ய­வில்லை. இந்­நி­லையில் அண்­மையில் பத்­தி­ரிகை ஆசி­ரி­யர்­களை சந்­தித்­தி­ருந்த ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கடந்த காலங்­களில் கொலை செய்­யப்­பட்ட ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு நியா­யத்தைப் பெற்­றுக்­கொ­டுக்க தாம் நட­வ­டிக்கை எடுப்­ப­தாக கூறி­யி­ருந்­தமை இங்கு சுட்­டிக்­காட்­டத்­தக்­கது.

மேலும் கடந்த காலங்­களில் நாட்டில் ஊடக சுதந்­திரம் என்­பது பேச்­ச­ள­வி­லேயே காணப்­பட்டு வந்­தது. சமூகப் பிரச்­சி­னைகள் மற்றும் பாது­காப்பு விவ­கா­ரங்­களை கையாண்ட ஊட­க­வி­ய­லா­ளர்கள், அச்­சு­றுத்­தல்­களை எதிர்­கொண்ட நிலை­மையே கடந்த காலங்­களில் காணப்­பட்­டது. இந்­நி­லையில் 2015ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் நாட்டில் ஏற்­பட்ட ஆட்சி மாற்­றத்தின் பின்னர் நாட்டின் ஊடக சுதந்­திர விட­யத்தில் குறிப்­பி­டத்­தக்க ஆக்­க­பூர்­வ­மான மாற்றம் ஏற்­பட்­டது என்­பதை ஏற்­றுக்­கொள்­ள­வேண்டும். குறிப்­பாக தகவல் அறியும் சட்­ட­மூ­ல­மா­னது அர­சி­ய­ல­மைப்பின் அடிப்­ப­டை ­வி­ட­ய­மாக ஏற்­றுக்­கொள்­ளப்­பட்டு பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளது. அந்த வகையில் கடந்த காலத்­துடன் ஒப்­பி­டு­கையில் தற்­போது ஊடக சுதந்­தி­ரத்தைப் பொறுத்­த­வ­ரையில் குறிப்­பி­டத்­தக்க அளவு திருப்­தி­ய­டையும் நிலையில் நாம் இருக்­கின்றோம்.

ஆனால் இன்னும் இந்த விட­யத்தில் முன்­னேற்றம் காணப்­ப­ட­வேண்­டி­யுள்­ளது. கடந்த காலங்­களில் இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லா­ளர்கள் கொலை, ஊட­க­வி­ய­லா­ளர்கள் மீதான தாக்­கு­தல்கள் மற்றும் காணாமல் போன ஊட­க­வி­ய­லா­ளர்கள் தொடர்பில் விசா­ர­ணைகள் நடத்­தப்­பட்டு குற்­ற­வா­ளிகள் சட்­டத்தின் முன் கொண்­டு­வ­ரப்­ப­ட­வேண்டும். சமூகப் பிரச்­சி­னைகள் மற்றும் உண்­மை­களை வெளிக்­கொண்­டு­வந்­த­மைக்­காக சில ஊட­க­வி­ய­லா­ளர்கள் சமூ­க­வி­ரோ­தி­களின் ஆயு­தங்­க­ளுக்கு இரை­யா­கி­யுள்­ளனர். இவ்­வா­றான சம்­ப­வங்­க­ளுக்கு எந்­த­வொ­ரு­வ­கை­யிலும் இட­ம­ளிக்கக் கூடாது. கொலை செய்­யப்­பட்ட ஊட­க­வி­ய­லா­ளர்கள் தொடர்பில் விசா­ரணை நடத்­தப்­பட்டு சூத்­தி­ர­தா­ரி­களை சட்­டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்­ப­துடன் பாதிக்­கப்­பட்ட குறித்த ஊட­க­வி­ய­லா­ளர்­களின் குடும்­பங்­க­ளுக்கு தேவை­யான உத­வி­களை செய்­து­கொ­டுக்­க­வேண்­டி­யதும் அவ­சி­ய­மாகும்.

அது­மட்­டு­மன்றி கடந்த காலங்­களில் தாக்­கு­த­லுக்­குள்­ளான ஊடக நிறு­வ­னங்­க­ளுக்கும் நீதியைப் பெற்­றுக்­கொ­டுக்­க­வேண்டும். அது­மட்­டு­மன்றி புதிய அர­சாங்­க­மா­னது எக்­கா­ரணம் கொண்டும் இனி­வரும் காலங்­களில் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு அச்­சு­றுத்­தல்கள் ஏற்­ப­டுத்தும் வகை­யி­லான சூழல்­களை ஏற்­ப­டுத்­தக்­கூ­டாது. ஊட­க­வி­ய­லா­ளர்கள் தமது பணியை சுதந்­தி­ரத்­து­டனும் அச்­சு­றுத்­தல்கள், தடைகள் இன்­றியும் முன்­னெ­டுப்­ப­தற்கு தேவை­யான சூழலை உரு­வாக்கிக் கொடுக்­க­வேண்டும். மேலும் ஊட­க­வி­ய­லா­ளர்­களும் தமது தொழில் கௌரவத்தைப் பாதுகாக்கும் வகையில் சுய தணிக்கையுடனும் பக்கச்சார்பின்றியும் தமது தொழில்சார் தன்மையைப் பேணும் வகையில் செயற்படவேண்டும். எந்தவொரு கட்டத்திலும் தமது தொழில் தர்மம் பாதிக்கும் வகையில் ஊடகவியலாளர்கள் தமது செயற்பாடுகளை முன்னெடுக்க முயற்சிக்கக்கூடாது.

எனவே தற்­போது நாட்டில் ஒரு ஆக்­க­பூர்­வ­மான அர­சியல் சூழல் உரு­வா­கி­யுள்ள நிலையில் ஊட­க­வி­ய­லா­ளர்­களும் தமது பணி­களை தடைகள் இன்றி முன்­னெ­டுக்கும் நிலைமை ஏற்­ப­டுத்­தப்­ப­ட­வேண்டும். இதனை அர­சாங்கம் உறு­திப்­ப­டுத்த வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். கடந்த காலங்­களில் இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லா­ளர்கள் தொடர்­பான துன்­ப­க­ர­மான நிகழ்­வுகள் இதன்­பின்னர் இடம்­பெறக்­கூ­டாது. ஊடக சுதந்­தி­ரத்தில் இலங்­கை­யா­னது உல­க­நா­டுகள் வரி­சையில் மிகவும் உயர்ந்­த­மட்­டத்­திற்கு வர­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். அவ்­வா­றா­ன­தொரு சிறந்­த­வ­கை­யி­லான ஊடக சுதந்­தி­ரத்தை நோக்கி எமது நாடு பய­ணிக்­க­வேண்டும். அதற்கு ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளும் தமது பங்­க­ளிப்பை உரிய முறையில் வழங்­க­வேண்டும் என்­ப­துடன் அத­ற் கேற்ற சூழலை உருவாக்குவதில் அரசாங்கமும் அர்ப்பணிப்புடன் செயற்படுவது அவசியம் என்பதை வலியுறுத்துகின்றோம்
« PREV
NEXT »

No comments