Latest News

April 10, 2016

வடமாகாண முதல்வரை சந்தித்த நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இந்திய பிரதிநிதி!?
by admin - 0

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தமிழக அல்லது இந்திய பிரதிநிதியாக கருதப்பட்ட அக்னி, வடமாகாண முதலமைச்சர் சந்தித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு மேற்கொண்டிருந்த விஜயத்தின் போது, வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை, சுப்பிரமணியம் சந்தித்ததாக ஆங்கில ஊடகம் ஒன்று இன்று தகவல் வெளியிட்டுள்ளது.

அக்னி சுப்பிரமணியம், யாழ்ப்பாணத்தில் பல தரப்பினரையும் சந்தித்தார். அத்துடன் விடுதலைப்புலிகளின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளரான குமரன் பத்மநாதனுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள வீட்டில் விருந்தினராகவும் அவர் கலந்து கொண்டுள்ளார்.

அக்னி சுப்பிரமணியத்துக்கு முன்னர் இலங்கை வர தடைவிதிக்கப்பட்டிருந்ததாக அந்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
« PREV
NEXT »

No comments