Latest News

April 12, 2016

“இலங்கையில் தமிழர்களின் உண்மை நிலை” பிரித்தானியப் பாரளுமன்றில் தொழில்கட்சிக்கும், தமிழர்களுக்குமான ஒன்று கூடல்!
by Unknown - 0

பிரித்தானியப் பாரளுமன்ற கட்டடத்தொகுதியில் நேற்றைய தினம் (11-04-2016) திங்கள் அன்று மாலை பிரித்தானியத் தொழில்கட்சிக்கும், பிரித்தானியத் தமிழர்களுக்குமிடையிலான ஒன்று கூடல் ஒன்று நடைபெற்றுள்ளது.

திங்கள் மாலை 7:00 மணி முதல் வரை 9:00 மணிவரை Boothroyd Room, Portcullis House @ Parliament எனும் இடத்தில்  நடைபெற்ற  இவ் ஒன்றுகூடலில் பிரதம விருந்தினராக தொழில்கட்சித் தலைவர் மதிப்பிற்குரிய எதிர்க் கட்சித் தலைவர் ஜெறமி கோபன் ( The Leader of the Labour Party Rt Hon Jeremy Corbyn MP), கெளரவ விருந்தினராக நிழல் வெளிவிவகார அமைச்சர் மதிப்பிற்குரிய கிலாரி பென் (The Shadow Foreign Secretary Rt Hon Hilary Benn MP), ஆகியோர் கலந்துகொண்டனர். 

இலங்கையில் தமிழர்களின் உண்மை நிலை எனும் தலைப்பில் நடைபெற்ற  இவ் ஒன்றுகூடலில் பிரான்ஸிஸ் ஹறிஷன் (Former BBC Presenter Francis Harrison) , ஷோனியா ஸ்கீட்ஸ் (Director of Freedom from Torture Sonya) , கலும் மக்றே (Director of Killing Fields Cullum Mcrae ) , DR. சுதா நடராஜா (SOAS University of London Lecturer Dr Sutha Nadarajah) ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர் .

அத்தோடு பல தொழில்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் தொண்டு நிறுவன பிரதினிதிகள் , பெரும்திரளான தமிழ் மக்கள் பிரதிநிதிகள் என பலர் இவ் ஒன்றுகூடலில் கலந்துகொன்டிருந்தது  குறிப்பிடத்தக்கது.









« PREV
NEXT »

No comments