Latest News

April 13, 2016

கட்­ட­ணத்தில் சீரில்லை- விவ­சா­யிகள் விசனம்
by admin - 0

மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் கம­நல அபி­வி­ருத்தி வங்­கி­களில் சேமிப்­புக்­க­ணக்கை ஆரம்­பிப்­ப­தற்கு ஒரு சீரான கட்­டணம் அற­வி­டப்­ப­ட­வில்லை என்று விவ­சா­யிகள் விசனம் தெரி­விக்­கின்­றனர்.

பசளை நிதி மானி­யத்­துக்கு விண்­ணப்­பிக்கும் ஒரு விவ­சாயி ஏதா­வது ஒரு அரச அல்­லது வர்த்­தக வங்­கியில் சேமிப்பு கணக்கை வைத்­தி­ருக்க வேண்டும் என்­பது நிபந்­த­னை­யாகும். இருந்த போதிலும் அவ்­வாறு வைத்­தி­ருந்­தாலும் கம­நல அபி­வி­ருத்தி வங்­கி­யிலும் கணக்கை திறக்­கு­மாறு விவ­சா­யிகள் நிர்ப்­பந்­திக்­கப்­பட்­டனர். இதற்கு அமை­வாக நிதி­மா­னியம் மறுக்­கப்­படும் எனப் பயந்து விவ­சா­யிகள் கணக்கை ஆரம்­பித்­துள்­ளனர்.

எனினும் இதற்­கான கட்­டணம் ஒரு சீராக அற­வி­டப்­ப­ட­வில்லை. மண்டூர் கம­நல சேவை நிலை­யத்தில் ஆயிரம் ரூபாயும் வெல்­லா­வெளி கம­நல சேவை நிலை­யத்தில் ஐநூறு ரூபாயும் அற­வி­டப்­பட்­டுள்­ளன.

கொக்கட்­டிச்­சோலை மற்றும் வாழைச்­சேனை நிலை­யங்­க­ளிலும் ஆயிரம் ரூபா அறி­வி­டப்­பட்­ட­தாக தெரி­வித்த விவ­சா­யிகள் அதற்­கான பற்­றுச்­சீட்­டு­க­ளையும் காண்­பித்­தனர்.

இவ்­வாறு ஒரு மாவட்­டத்­துக்­குள்­ளேயே வேறு வேறு வித­மான கட்­டணம் அற­வி­டப்­பட்­ட­மைக்கு யார் பொறுப்பு. நல்­லாட்­சியில் அரச நிரு­வாகம் சரி­யாக இயங்­க­வில்­லையா? சம்­பந்­தப்­பட்­ட­வர்கள் சரி­யான அறி­வு­றுத்­தலை வழங்­கி­யி­ருக்க வேண்டும். அத்­துடன் மேற்­பார்வை செய்­தி­ருக்­கவும் வேண்டும். விவ­சா­யி­களின் அமைப்­பான விவ­சாய அமைப்பு மற்றும் மாவட்ட விவ­சாய அமைப்பு என்­பன இதனை அறிந்­தி­ருந்தும் உரிய நட­வ­டிக்கை எடுக்கத் தவ­றி­விட்­டன. ஆங்­காங்கே நிய­மிக்­கப்­பட்­டுள்ள விவசாய பிரதிநிதிகளும் கரிசனை காட்டவில்லை. அரச நிருவாகம் ஓர் ஒழுங்கு முறைக்கு உட்பட்டது. இவ்வாறு விவசாயிகள் பலரும் கவலையும் அதிருப்தியும் தெரிவித்தனர்.
« PREV
NEXT »

No comments