Latest News

April 12, 2016

துப்பாக்கிச்சூட்டில் குடும்பஸ்தர் பலி
by admin - 0

எல்­பிட்­டிய – ஊறு­கஸ்­மங்­ஹந்­திய பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட மீகஸ்­பிட்­டிய பகு­தியில் அடை­யாளம் தெரி­யாத ஆயு­த­தா­ரிகள் நடத்­திய துப்­பாக்கிச்சூட்டில் முச்­சக்­கர வண்­டி­யொன்றில் பய­ணித்­துக்­கொண்­டி­ருந்த குடும்­பஸ்தர் ஒருவர் கொல்­லப்­பட்­டுள்ளார். 

இச்­சம்ப்வம் நேற்று பிற்­பகல் 2.30 மணி­ய­ளவில் இடம்­பெற்­றுள்­ள­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் அலு­வ­லகம் தெரி­வித்­தது. 52 வய­தான நந்­த­சிரி சந்­து­ருவன் சம­ர­சிங்க என்­ப­வரே இவ்­வாறு கொல்­லப்­பட்­டுள்­ள­தாக பொலிஸார் மேலும் தெரி­வித்­தனர்.

நேற்­றைய தினம் பகல் வேளையில் முச்­சக்­கர வண்­டி­யொன்று செலுத்திக் கொண்டு குறித்த 52 வய­தான குடும்­பஸ்தர் சென்­றுகொண்­டி­ருந்த வேளை மோட்டார் சைக்கிள் ஒன்றில் வந்­துள்ள அடை­யாளம் தெரி­யாத இரு ஆயு­த­தா­ரிகள் ரீ 56 ரக துப்­பாக்­கியைக் கொண்டு துப்­பாக்கிப் பிர­யோகம் செய்­துள்­ளனர். இதனால் படு­கா­ய­ம­டைந்த நபர் உட­ன­டி­யாக எல்­பிட்­டிய வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்பட்­டுள்ள போதும் அங்கு வைத்து அவர் உயி­ரி­ழந்­துள்ளார். கொலைக்­கான காரணம் இது வரை தெரி­யாத நிலையில் பொலிஸார் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ளனர்.
« PREV
NEXT »

No comments