Latest News

April 12, 2016

எந்த பாரிய திட்டமானாலும் எமக்கு ஊடாகவே மத்திய அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும்
by admin - 0




வட­மா­கா­ண­ மக்­களின் வாழ்­வா­தா­ர­ மேம்­பாட்­டிற்­கான உத­விப்­பாலம் (உத­விகள் வழங்கும் நிகழ்வு) கைதடி ஸ்ரீ விநா­யகர் மண்­ட­பத்தில் கடந்த சனிக்கிழமையன்று நடைபெற்றபோது வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் ஆற்றிய உரை 


சரி­யா­க ­ஒ­ரு ­வ­ரு­ட ­கா­லத்தின் பின்னர் இந்­த­ நி­கழ்­வு­ மீண்டும் நடை­பெ­று­கி­றது. மூன்றாம் ஆண்­டாக இந் நிகழ்­வு­ ஆற்­றுப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது. உத­விப்­பா­லம்­என்­ற­ மக்கள் பய­னுறுந் திட்­டத்தின் கீழ் போரினால் பாதிக்­கப்­பட்­ட எம் மக்கள் பல­ருக்கும் பல­வி­த­மா­ன­ உ­த­வி­களை நாம் செய்­து­ வ­ரு­கின்றோம்.

எனினும் பாரி­ய ­திட்­டங்­க­ளை­யே­ உ­லகம் எதிர்­பார்க்­கின்­றது. ஆனால் அத்­திட்­டங்கள் வெளிநாட்­டு­ நி­று­வ­னங்­களின் நிதி­ உ­த­வி­யுடன் மத்­தி­ய­ அ­ர­சாங்­கத்­தி­னா­லே­யே­ செ­யற்­ப­டுத்­தப்­பட்­டு ­வ­ரு­கின்­றன. பல­ த­ட­வை­களில் எங்­க­ளிடம் கேட்­கா­து­ எ­ம­து ­அ­லு­வ­லர்­க­ளுடன் மட்டும் கலந்­தா­லோ­சித்தே இவ்­வித­மா­ன ­பா­ரி­ய­ செ­யற்­றிட்­டங்கள் நடை­மு­றைப்­படுத்­தப்­பட்­டு­ வ­ரு­கின்­றன. இதனால் நெல்­சிப் ­போன்­ற­ பா­ரி­ய­ செ­யற்­றிட்­டங்­களில் ஊழல் நடை­பெற்­ற­போ­து­ எம்மால் அது ­பற்­றி­ ந­ட­வ­டிக்­கைகள் எடுப்­ப­து ­சி­ர­ம­மாக இருந்­தது. எம­து­ மா­கா­ணத்­திற்­கு­ரி­ய­ எந்­த ­பா­ரி­ய ­செயற்­றிட்­ட­மா­னாலும் எமக்­கூ­டா­க­வே ­அ­வை ­மத்­திய­ அ­ர­சாங்­கத்­தினால் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட­ வேண்டும். கட­மைக்­காகக் கடிதம் அனுப்­பி தாம் நினைத்­த­வா­று ­ந­டந்­து­கொள்­வதை நாம் கண்­டித்­து­ வ­ரு­கின்றோம்.

65,000 பொருத்­து­வீ­டுகள் திட்­டமும் தான் தோன்­றித்­த­ன­மா­க­ எ­ம­து ­பங்­கு­பற்றல் எது­வு­மின்­றி­யே­ அ­றி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள ­ஒ­ரு­ செ­யற்­றிட்டம். எம­து­ பங்­கு­பற்­ற­லை நாம் ஒரு­ ஆ­ண­வப் ­போக்கில் கோர­வில்லை. எம்­மை ­ம­திக்­க­வில்­லை­ என்­ப­தற்­கா­க நாம் கோர­வில்லை. மக்கள் பிர­தி­நி­தி­க­ளா­கி­ய­ எங்­க­ளுடன் கலந்­தா­லோ­சித்தால் மக்கள் சார்­பான­ க­ருத்­துக்­க­ளை­ வெளி­யி­டலாம் என்­ற­ எண்­ணத்­தி­லே­யே ­எம்­முடன் கலந்­தா­லோ­சித்து­ மு­டி­வு­க­ளை­ எ­டுக்­க­ வேண்­டு­கின்றோம். அத்­துடன் அதி­கா­ரப்­ப­கிர்வு, அதி­காரப் பகிர்­வு ­என்­று வாய் கிழியக் கத்­தி­ விட்டு இதைக்­கூட எமக்குத் தெரி­யாமல் செயற்­ப­டுத்­த­ முன்­வந்தால் மத்­தியின் உண்­மை­யா­ன ­ம­ன­நி­லை ­என்­ன­ என்­ற ­கேள்­வியே­ மே­லோங்­கி­ நிற்கும்.

இன்றும் சென்­ற­ ஆண்டைப் போல் CSR (Corporate Social Responsibility) என்­ற­ ச­மூ­கத்­திற்­கா­ன ­வர்த்­தகக் குழுமப் பொறுப்­பு­ணர்வு­ என்­ற­ கொள்­கை­ ஆற்­றுப்­ப­டுத்­த­லா­ன­து ­எ­ம­து ­கொ­டை­யா­ளர்­களால் எம் சார்­பா­க­வே ­ந­டை­மு­றைப்­ப­டுத்தப்படு­கின்­றன. அவர்கள் அளிக்கும் உத­வி­ எ­ம­து­ பா­திக்­கப்­பட்­ட ­மக்­க­ளுக்­கு­ வ­ரு­டப்­பி­றப்பின் போது­ அ­வர்கள் வாழ்வில் ஒரு ­ம­று ­மலர்ச்­சி­யை­ ஏற்­ப­டுத்தும் என்­பதில் ஐய­மில்லை. இன்று இங்­கு­ வந்­தி­ருப்போர் நித்­தி­ய­ கல்­யா­ணி ­ந­கை­மா­ளி­கை­ வர்த்­த­க­ நி­லை­யத்தின் சொந்­தக்­காரர் ஜெயராஜும் கொழும்­பு­ வெள்ள­வத்­தை­ ம­யூ­ரா­பதி­ அ­றங்­கா­வலர் சுந்­த­ர­லிங்கமும் மட்­டு­மல்ல. சங்கம் அமைத்­து­ பலர் இங்­கு­ வந்­துள்­ளார்கள். அவர்­களால் ஒழுங்­கு­ செய்­யப்­பட்­ட­ ப­ண ­உ­த­வி­யுடன் தான் இன்­றைய இந்தக் கைங்­க­ரியம் முன்­னெ­டுத்துச் செல்­லப்­ப­டு­கி­றது. அவர்கள் மயூ­ரா­ப­தி­ அம்மன் நலன்­பு­ரிச்­சங்கம் என்­ற­ ஒ­ரு­ சங்­கத்தை­ அ­மைத்து­ அ­த­னூ­டா­க­ அதன் அங்­கத்­த­வர்­களின் உத­வி­களைப் பெற்­று­ போ­ரினால் பாதிக்­கப்­பட்­ட ­எ­ம­து ­மக்­க­ளுக்கு ­உ­த­வ­ முன்­வந்­துள்­ளார்கள். இங்­கு ­வந்­தி­ருக்கும் அங்­கத்­த­வர்கள் பலர் என்­னை­ வந்­து­ கொ­ழும்பில் சந்­தித்தும் இருக்­கின்­றார்கள். சைக்­கிள்கள், தண்ணீர் பம்­புகள், தையல் மெஷின்கள், பாட­சாலைப் பைகள், கால­ணிகள் என்­று­ ப­ல­வி­த­மா­ன­ உ­த­வி­களைத் தந்­து­த­வி­யுள்­ளார்கள்.

எம்மைச் சந்­திக்­கப் ­ப­ல­ பா­திக்­கப்­பட்­ட­மக்கள் புதன்கிழ­மை­களில் படை­யெ­டுத்து­ வ­ரு­கின்­றார்கள். பலரின் குறை­களைத் தீர்க்க மு­டி­யா­த­ நி­லையில் நாங்கள் அவர்கள் பெயர்­க­ளையும் தேவை­க­ளையும் பதிந்­து­வைக்­கின்றோம். இவ்­வா­றா­ன ­நி­கழ்­வுகள் வந்­ததும் அவர்­க­ளுக்­கு­ எம்­மா­லா­ன­ உ­த­வி­க­ளை­ வ­ழங்­கு­கின்றோம். பாதிக்­கப்­பட்­ட ­மக்­களை இனங்­கண்­டு ­உ­த­விகள் புரி­கின்றோம்.

இன்­றை­ய­ நி­கழ்­வு­ ஒ­ரு­ தற்­கா­லி­க­மா­ன­ ம­கிழ்­வேற்றும் நிகழ்வே. வரு­டப்­பி­றப்பின் போது இங்­கு ­வந்­தி­ருக்கும் பய­னா­ளி­க­ளுக்கு ­ஏ­தோ ­ஒ­ரு ­உ­த­வி­ கி­டைக்கப் போகின்­றது. ஆனால் அது­ உங்­க­ளை­ வ­ருடப் பிறப்பின் போது­ ம­கிழ்­வுடன் வைத்­தி­ருக்­க ­எ­ம­து­ கொடை­யா­ளிகள் தரும் உதவி. அதை­ நாங்கள் மதிக்­கின்றோம். வர­வேற்­கின்றோம். மகிழ்­வுடன் கையேற்­கின்றோம். உங்­க­ளிடம் கைய­ளிக்­கின்றோம். ஆனால், வெறும் உத­வி­க­ளி­லே­யே­ கா­லத்தைக் கடத்தும் ஒரு­ ப­ழக்கம் எங்­களுள் சில­ருக்கு இப்­பொ­ழு­து ­ப­ழக்­கப்­பட்­டு­ வ­ரு­கி­றது. எங்­கா­வ­து­ சென்­று­ ஏ­தா­வ­து ­உ­த­வி­களைப் பெற்­று­ அன்­றாடம் வயிற்­றை­ நிரப்ப­ அ­வர்கள் ஆயத்­த­மாகி இருக்­கின்­றார்கள். இது­ த­வ­றா­ன ­வழி­முறை.

பல­ மா­ண­வ­ மா­ண­விகள் பிற­நா­டு­களில் இருந்­து ­அ­வர்­களின் உற்றார், உற­வினர் அனுப்பும் பணத்­தை­ நம்­பி­ வாழ்ந்­து­ வ­ரு­கின்­றனர். அங்­கு ­அ­வர்கள் எவ்­வ­ள­வு­ பா­டு­பட்­டு­ வ­யிற்றைக் கட்டி,வாயைக் கட்டிப் பணம் அனுப்­பு­கின்­றார்கள் என்­பதை­ எம்முள் பலர் அறி­வ­தில்லை, உணர்­வ­தில்லை. மாண­வ­மா­ண­வியர் தம் சொந்தக் கால்­களில் நின்­று­ முன்­னே­ற­ மு­டி­வெ­டுக்­க­வேண்டும். படித்­து­விட்­டு­ வே­லை ­கி­டைக்­கா­து­ த­விக்­கின்றோம் என்­று­ பலர் கூறு­வ­து­ எ­ன­து ­கா­து­க­ளுக்குக் கேட்­கின்­றது. ஆனால் அந்­த ­நி­லை­ நி­ரந்­த­ர­மா­ன­தாக இருக்­காது. வெளிநாட்டுப் புலம்­பெயர் எம­து­ மக்­களின் உத­வி­யுடன், எம­து­ கொ­டை­யா­ளி­களின் உத­வி­யுடன் பல­ செ­யற்­திட்­டங்­களைச் செயன்­மு­றைப்­ப­டுத்தப்போகும் காலம் வெகு­தூ­ரத்­தி­லில்லை.

படித்­த­வர்­களும் பாம­ரர்­களும் ஏதாவ­து ­தொழில்­களில் ஈடு­ப­ட­வேண்டும். கணினி­ பாற்­பட்­ட­ தொ­ழில்­க­ளையும் சிறு­கைத்­தொ­ழில்­க­ளை­யும் நாம் ஊக்­கு­வித்­து­ வ­ரு­கின்றோம். எம்மைப் பொறுத்­த­வ­ரையில் பாரி­ய­ தொ­ழிற்­சா­லை­க­ளையும் ஆலை­க­ளையும் நிறு­வி­ மக்­க­ளை ­ஒ­ரு ­இ­டத்­திற்குக் கொண்­டு­வந்­து­ ப­ல­வி­த­ ச­மூகச் சிக்­கல்­க­ளை ­ஏற்­ப­டுத்­தா­து­ எ­மது சூழ­லை­ தொ­டர்ந்­தி­ருக்கச் செய்­து­ மக்கள் தாம் இருந்த இடங்­களில் இருந்­தே ­சி­று­கைத்­தொ­ழில்­களில் ஈடு­ப­டவும் சந்­தை­வாய்ப்­புக்­களைப் பெறவும் நாம் ஆவ­ன­ செய்­து ­வ­ரு­கின்றோம்.

ஆகவே, இன்­றை­ய­ கொ­டைகள் கைய­ளிக்கும் நிகழ்­வு­ பா­திப்­புற்­ற­ மக்­களின் மனங்­களில் வருடப் பிறப்பின் போது­ ம­ன ­ம­கிழ்­வை­ ஏற்­ப­டுத்­த­வே­ நாமும் எம­து ­கொடை­யா­ளர்­களும் சேர்ந்­து­ செய்யும் கைங்­க­ரியம். தொடர்ந்­து­ உங்­களை­ கை­யேந்­து­ப­வர்­க­ளா­க­ நாங்கள் வைத்­தி­ருக்­க­மாட்டோம். ஆக­வே ­சி­றி­ய­மத்­தி­ய­த­ர­ தொழில் முயற்­சி­களில் யாவரும் இறங்­க ­முன்­வ­ர­வேண்டும். உதா­ர­ணத்­திற்­கு­ நெ­சவுத் தொழி­லை­ மக்­க­ளி­டை­யே­ ப­ரப்­பி­ அ­வர்­களின் படைப்­புக்­க­ளை ­ஏற்­று­ சந்தைப்படுத்­தி­ ப­யனைப் பெறலாம். இவ்­வா­றா­ன­ தொ­ழில்­களில் நீங்கள் ஈடு­ப­டவும் எம­து­ கொ­டை­யா­ளர்கள் உத­வு­வார்கள் என்­ப­தற்­கு­ ஏற்­க­ன­வே ­டிமார்க் ஜெயராஜ் உத்­த­ர­வாதம் அளித்­துள்ளார். அவ­ருக்­கு­ எ­ன­து­ ம­ன­மார்ந்­த ­நன்­றிகள் உரித்­தா­குக. எங்கள் தொழிற்­றி­ற­னை­ மேம்­ப­டுத்­த­ வேண்டும். எம­து­ கைத்­தொ­ழில்­களின் தரத்­தை நாம் மேம்­ப­டுத்­த­ வேண்டும். மற்­ற­வர்­களின் உத­வி­க­ளை­ எ­திர்­பார்க்கும் குணம் போய் தன்­னு­று­தி­யுடன் தங்கள் தங்கள் சொந்தக் கால்­களில் நிற்­க­ எம்­ம­வர்கள் பழகிக் கொள்­ள­வேண்டும்.

எம­து ­கொ­டை­யா­ளர்­க­ளுக்கு­ எ­ம­து­ ம­னப்­பூர்­வ­மா­ன ­நன்­றி­களைத் இத்­த­ரு­ணத்தில் கூறி­வைக்­கின்றேன். உங்கள் நற்­செ­யல்­களால் எம­து ­பா­திக்­கப்­பட்­ட­ மக்­களில் சில­ருக்­கேனும் இவ்­வரு­ட ­வ­ருடப் பிறப்­பு­ வெளிச்சம் கொண்­ட­தாகத் திகழப் போகின்­றது. அதே­நேரம் அவர்கள் ஏதா­வ­து ­நி­ரந்­த­ர­ கைத்­தொ­ழில்­களில் ஈடு­ப­ட­ நாங்கள் ஆவ­ன­ செய்­ய­ வேண்டும்.

காலஞ்­சென்­ற­ சௌ­மியமூர்த்­தி­ தொண்­டமான் 500க்கும் மேற்­பட்­ட ­கு­டிசைக் கைத்­தொ­ழில்­க­ளை­ அ­டை­யாளம் கண்­டு ­த­ன­து­ ம­லை­ய­க­ மக்கள் அவற்றில் ஏதா­வ­தொன்றில் ஈடு­பட்டுப் பயன்­பெ­ற­வேண்டும் என்­று­ கோ­ரி­ நின்றார். மலை­ய­க ­மக்கள் பலர் மேற்­ப­டி ­ கு­டிசைக் கைத்­தொ­ழில்­களில் ஈடு­பட்டுத் தம­து­ வ­ரு­மா­னங்­க­ளை­ வி­ருத்­தி­ செய்­து­ மேம்­ப­டுத்­தி­யும் ­வந்­தனர். கைத்­தொ­ழில்கள் பற்­றி­ய­ அ­றி­வை­ மேம்­ப­டுத்­தி­ மக்­க­ளுக்­கு ­அ­றி­மு­கப்­ப­டுத்­த­வேண்டும். அதற்­கா­ன ­ந­ட­வ­டிக்­கை­களில் எம­து­ கைத்­தொழிற் திணைக்­களம் ஈடு­ப­ட­வேண்டும்.

எம­து­ மக்­களில் பலர் இந்திய வீட்டுத் திட்டத்தின் கீழ் வீடுகளைக் கட்டத் தொடங்கிவிட்டு அவற்றைப் பூர்த்தி செய்ய நிதிவளம் இல்லாது தவிக்கின்றனர். அவர்களின் வீடுகளைக் கட்டி முடிக்க வெறும் இரண்டு அல்லது மூன்று இலட்சங்களே தேவைப்படுகிறது. ஒரு சுழலும் நிதியம் Revolving Fund ஒன்றை ஏற்படுத்திக் கடன் அடிப்படையில் அவர்களுக்கு மிகக் குறைந்த வட்டி­யுடன் இவ்வாறான கடன்களைக் கொடுத்துக் காலக்கிரமத்தில் அவற்றைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். வீடுகளைக் கட்டத் தொடங்கி முடிவுறச் செய்யமுடியாது தவிக்கும் பலருக்கு இப்பேர்ப்பட்ட ஒரு சுழலும் நிதியம் மறுமலர்ச்சியை உண்டுபண்ணும். அவ்வாறான ஒரு நிதியத்தை நடைமுறைப்படுத்த எமது அலுவலர்கள் தகைமை உடையவர்களாக இருக்கின்றார்கள் என்று இங்கு கூறிவைக்க விரும்புகின்றேன்.

பலர் எமக்குப் பணம் அனுப்புகின்றார்கள். அவற்றை ஒரு சிறப்பு வங்கிக் கணக்கில் இட்டு, உதவி கோரும் மக்களின் உண்மையான நிலை பற்றி எங்கள் அலுவலர்களைக் கொண்டு ஆராய்ந்தறிந்து அறிக்கை பெற்று, பணஉதவி செய்து, அவர்களின் தேவைகள் பூர்த்தியடைகின்றனவா என்று தொடர் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றோம். தேவையென்றால் சுழல் நிதியப் பாவனையை நடைமுறைப்படுத்தவும் எமது அலுவலர்கள் உதவுவார்கள் என்று கூறிவைக்கின்றேன். எம்மைப் பொறுத்த­வரையில் நாங்கள் மக்களைப் பிராந்திய ரீதியாகவோ மத, மொழி, சாதி ரீதியாகவோ பிரித்துப் பார்க்காது வகையற்றவர்கள் வளம் பெற உதவவேண்டும் என்ற குறிக்கோளுடன் சேவையாற்றி வருகின்றோம். உங்கள் அனைவரதும் வரவு நல்வரவாகுக என்று வாழ்த்துகின்றேன். உங்கள் கொடைப்பணி சிறக்க வாழ்த்துகின்றேன். எமது மக்கள் வாழ்வு விரைவில் மலர வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொண்டு எனது சிற்றுரையை இத்துடன் நிறைவுசெய்கின்றேன்.

Close
« PREV
NEXT »

No comments