Latest News

April 30, 2016

மரணித்த மனிதம் கவிதை நூல் வெளியீடு
by admin - 0

முல்லைப் பார்த்தா எழுதிய மரணித்த மனிதம் என்ற கவிதைத் தொகுதியின் வெளியீட்டு விழா இன்று மாலை 4.30 மணிக்கு யாழ். கச்சேரி அருகில் உள்ள வை.எம்.சீ.ஏ மண்டபத்தில் நடைபெற்றது. 

யாழ். பல்கலைக்கழக சட்டத்துறை மாணவனும் அகில இலங்கை இளைஞர் இலக்கிய மன்றத்தின் அமைப்பாளருமாகிய ஸ்ரீ. சிவஸ்கந்தஸ்ரீ தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் பிரதி முதல்வர் செந்தமிழ்ச்சொல்லருவி ச.லலீசன் கலந்து கொண்டார். 

நிகழ்வில் வரவேற்புரையை சட்டத்துறையின் புகுமுக மாணவி ப.கதிர்தர்சினியும் ஆசியுரையை முல்லை வலய தமிழ்ப்பாட உதவிக் கல்விப் பணிப்பாளர் கி.கௌரிபுத்திரியும் வாழ்த்துரைகளை முத்தையன்கட்டு வலதுகரை மகா வித்தியாயலய அதிபர் சி. நாகேந்திரராசாவும் கனடா - படைப்பாளிகள் உலகம் நிறுவுநர் ஐங்கரன் கதிர்காமநாதனும் நூல.ஆய்வுரையை யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட உதவிப் பதிவாளர் இ.சர்வேஸ்வராவும் ஆற்றினர். 

நூலாசிரியரான கற்சிலைமடு ஒட்டிசுட்டானைச் சேர்ந்த கனகரட்ணம் பார்த்தீபன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத்துறையில் மூன்றாம் ஆண்டில் பயின்றுகொண்டிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தொகுதியில் உள்ள கவிதைகளில் பெரும்பாலானவை போர் வலியைப் பாடுவனவாக உள்ளன.
« PREV
NEXT »

No comments