Latest News

April 17, 2016

ஆட்டம் காணும் மைத்திரி அரசு
by admin - 0

ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இதனால் ஆளும் கட்சியின் ஆட்சி ஆட்டம் காணலாம் என கூறப்படுகிறது

நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்க சபாநாயகரிடம் இவர்கள் அனுமதி கோரவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பதவிகள் வழங்கப்படும் போது கவனத்தில் கொள்ளாமை, பொது நடவடிக்கைகளில் தம்மை இணைத்து கொள்ளாமை, தமது குறைகளுக்கு செவிமடுக்காமை ஆகியன காரணமாக இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தின் மீது அதிருப்தியில் இருப்பதாக பேசப்படுகிறது.

இவ்வாறான நிலையில், குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பில் இரகசியமாக சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தியுள்ளனர்.

இவர்களில் பிரதியமைச்சர் பதவிகளை வகிப்பவர்களும் இருப்பதாக கூறப்படுகிறது
« PREV
NEXT »

No comments