Latest News

March 19, 2016

புலிகளுக்கு மீள் உயிர்கொடுக்கும் செயற்பாட்டில் சரத் பொன்சேகா
by admin - 0

ஐக்­கிய தேசியக் கட்­சியில் இடமும் அமைச்­சுப்­ப­த­வியும் கிடைத்­த­வுடன் சரத்பொன்­சேகா ஐக்­கிய தேசியக் கட்­சியின் புலிக்­கொள்­கைக்கு தன்­னையும் மாற்­றிக்­கொண்­டுள்ளார். இன்று அவரின் கருத்­துகள் அனைத்தும் புலி­க­ளுக்கு மீள் உயிர் கொடுப்­ப­தைப்­போ­லவே அமைந்­துள்­ளன என தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் தலை­வரும் மஹிந்த ஆத­ரவு அணியின் உறுப்­பி­ன­ரு­மான விமல் வீர­வன்ச தெரி­வித்தார்.

வடக்கு கிழக்கில் மஹிந்­தவை தோற்­க­டித்த எதி­ரி­களை பலப்­ப­டுத்தும் வேலைத்­திட்டம் அர­சாங்­கத்­தினால் துரி­த­க­தியில் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றது. புலம்­பெயர் புலி­களின் அனு­ச­ர­ணையில் வடக்கு கிழக்கில் மீண்டும் புலி­களின் ஆதிக்­கத்தை ஏற்­ப­டுத்தும் வேலைத்­திட்­டங்கள் மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தா­கவும் அவர் குறிப்­பிட்டார்.

பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சேகா இறுதி யுத்தம் தொடர்பில் முன்­வைத்­து­வரும் கருத்­துகள் தொடர்பில் மஹிந்த அணியின் நிலைப்­பாட்டை வின­விய போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறு­கையில்,
மூன்று தசாப்தம் நாட்டில் நில­விய யுத்த சூழலை மூன்று ஆண்­டு­களில் முடித்து நாட்டில் அமை­தி­யையும், அபி­வி­ருத்­தி­யையும் நாம் ஏற்­ப­டுத்­தினோம்.

எமது இரா­ணு­வத்தின் தாக்­கு­தலில் புலிகள் மட்­டுமே இலக்­காக இருந்­தனர். மாறாக பொது­மக்கள் எவ­ரையும் கொல்லவேண்டும் என்ற நிலை­பாட்டில் நாம் இருக்­க­வில்லை. ஆனால் அன்று யுத்­தத்தை முன்­னெ­டுத்து சென்­ற­வர்கள் இன்று இரா­ணு­வத்­தி­ன­ருக்கு எதி­ராக கருத்­து­களை முன்­வைத்து வரு­கின்­றமை ஒரு­போதும் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது.
கடந்த ஜனா­தி­பதி தேர்­த­லின்­போதும் பொதுத் தேர்­த­லின்­போதும் தோல்­வி­யுற்ற சரத் பொன்­சே­கா­வுக்கு ஐக்­கிய தேசியக் கட்­சியில் இடமும் அமைச்­சுப்­ப­த­வியும் கொடுத்­த­வுடன் ஐக்­கிய தேசியக் கட்­சியின் புலிக்­கொள்­கைக்கு தன்­னையும் மாற்­றிக்­கொண்­டுள்ளார். இன்று அவரின் கருத்­துகள் அனைத்தும் புலி­க­ளுக்கு மீள் உயிர் கொடுப்­ப­தைப்­போ­லவே அமைந்­துள்­ளன. இன்று அவர் தெரி­விக்கும் கருத்­து­களை ஏன் அன்று மக்­க­ளுக்கு தெரி­விக்­க­வில்லை. இவ்­வாறு எமது இரா­ணு­வத்­தையும், பாது­காப்பு இர­க­சி­யங்­க­ளையும் காட்­டிக்­கொ­டுக்கும் இரா­ணுவ தள­ப­தியை வைத்­துக்­கொண்டு எவ்­வாறு யுத்­தத்தை முடி­வுக்கு கொண்­டு­வந்­தனர் என்­பதில் ஆச்­ச­ரி­யமேயாகும்.

வடக்கு கிழக்கில் மஹிந்­தவை தோற்­க­டித்த எதி­ரி­களை பலப்­ப­டுத்தும் வேலைத்­திட்டம் துரி­த­மாக நடை­பெற்று வரு­கின்­றது. புலம்­பெயர் புலி­களின் அனு­ச­ர­ணையில் இயங்கும் நிறு­வ­னங்­களை இங்கு வர­வ­ழைத்து வடக்கு கிழக்கில் மீண்டும் புலி­களின் ஆதிக்­கத்தை ஏற்­ப­டுத்தும் வேலைத்­திட்­டங்கள் மும்­மு­ர­மாக மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. ஒரு­புறம் புலி­களின் பணத்தில் வடக்கும் கிழக்கும் பல­ம­டைந்து வரும் நிலையில் மறு­புறம் இந்­தி­யாவின் ஒரு காலணித்­துவ நாடாக இலங்­கையை மாற்­றி­ய­மைக்கும் வேலையும் நடை­பெற்று வரு­கின்­றது.

மேலும் இறு­திக்­கட்ட யுத்தம் தொடர்பில் யுத்த குற்ற விசா­ர­ணைகள் நடை­பெ­ற­வுள்­ளன. எமது இரா­ணு­வத்தை சிறை­களில் வைத்து சித்­தி­ர­வ­தைகள் செய்யும் நட­வ­டிக்கை இப்­போதே ஆரம்­ப­மா­கி­விட்­டது. இன்னும் சிறிது காலத்தில் முழுமையாக எமது இராணுவத்தை போர்க்குற்றவாளிகள் என்ற நிலைப்பாட்டில் கொண்டுவந்து புலிகளை கொன்றதற்காக இராணுவத்தை சர்வதேச நீதிமன்றில் தண்டிக்கப்போகின்றனர். அதற்கான முக்கிய பொறுப்பு பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகாவிடமே உள்ளது. இப்போதிருந்தே அவரது பணியினை ஆரம்பித்து விட்டார் என்றார்.
« PREV
NEXT »

No comments