Latest News

March 18, 2016

வடக்­கி­லுள்ள படை­யினர் பௌத்­தத்தை பரப்பும் செயற்­பாட்டில் ஈடு­பட்­டுள்­ளனர்
by admin - 0

வடக்கில் நிலை­கொண்­டுள்ள இரா­ணு­வத்­தினர் அப்­பி­ர­தே­சங்­களில் தமது கைங்­க­ரி­யங்­களை அதி­க­ரித்­துக்­கொள்ளும் முயற்­சி­யி­லேயே உள்­ளனர். அண்­மை­யில்­ கூட கிளி­நொச்­சியில் பௌத்த விகா­ரை­யொன்றை அமைத்­துள்­ளனர். எனவே அவர்கள் அங்கு பௌத்த மதத்தை பரப்பும் செயற்­பா­டு­களை மேற்­கொண்­டு­வ­ரு­வ­தாக நவ­சம சமாஜக் கட்­சியின் பொரு­ளாளர் வல்­லி­புரம் திரு­நா­வுக்­க­ரசு தெரி­வித்தார்.

நவ­சம சமாஜக் கட்சி ஏற்­பா­டு­செய்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பு நேற்று காலை கொழும்பில் நடை­பெற்­றது. அதில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்தார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

நாட்­டி­லுள்ள இரு பிர­தான கட்­சி­களும் இணைந்து ஆட்சி நடத்­து­கின்­ற­போதும் அக்­கட்­சி­க­ளுக்­கி­டையில் உள்­ளக முரண்­பாடு நில­வு­வதை அவ­தா­னிக்க முடி­கி­றது. இரு கட்­சி­களும் 2020 இல் தனித்து ஆட்­சி­ய­மைப்­பதை பிர­தான நோக்­கா­கக்­கொண்டே செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றன. எனவே தேசிய அர­சாங்கம் இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வை முன்­வைக்­குமா என்ற சந்­தேகம் எழுந்­துள்­ளது.

மேலும் ஐக்­கிய மக்­கள சுதந்­திரக் கூட்டமைப்பின் பொதுச்­செ­ய­லா­ள­ராகக் பத­வி­யேற்­றுள்ள மஹிந்த அம­ர­வீர, தேசிய இனப்­பி­ரச்­சினை தொடர்பில் தங்­க­ளிடம் பிரத்­தி­யே­க­மான நிலைப்­பா­டொன்று உள்­ள­தா­கவும், கூட்­ட­மைப்பில் அங்கம் வகிக்கும் கட்­சிகள் அனைத்தும் ஏற்­றுக்­கொண்டால் அதனை நடை­மு­றைப்­ப­டுத்தத் தயா­ராக உள்­ள­தா­கவும் குறிப்­பிட்­டுள்ளார். எனவே இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்­வு­காண்­பதில் இது­வ­ரையில் உறு­தி­யான நிலைப்­பா­டில்லை என்றே கூற­வேண்­டி­யுள்­ளது.
மேலும் கடந்த வாரம் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன யாழ்ப்­பாணம் சென்று வலி­காமம் வடக்­கி­லுள்ள சுமார் 700 ஏக்கர் காணி­களை மக்­க­ளுக்கு கைய­ளித்­தார். எனினும் அவை இன்னும் பூர­ண­மாக மக்­க­ளிடம் கைய­ளிக்­கப்­ப­ட­வில்லை என்ற தக­வலை எம்மால் அறி­ய­மு­டி­கி­றது. ஜனா­தி­பதி உத்­தி­யோ­க­பூர்­வ­மாக காணி­களை மக்­க­ளிடம் கைய­ளித்­தாலும் அங்­குள்ள இரா­ணுவ முகாம்கள் இன்னும் அகற்­றப்­ப­ட­வில்லை. அதனால் மக்கள் அக்­கா­ணி­களை உரித்­து­டை­ய­தாக்­கு­வதில் சிக்­கல்­நிலை உள்­ளது.

மேலும், எதி­வரும் ஜூன் மாதத்­திற்கு முன்னர் காணிகள் அனைத்­தையும் மக்­க­ளிடம் கைய­ளிப்­ப­தாக அர­சாங்கம் குறிப்­பிட்­டுள்­ளது. எனினும் அது நடை­முறைச் சாத்­தியம் அற்ற விடயம். ஆகவே யதார்த்­த­மான கால அவ­கா­சத்தை வழங்கி காணி­களை மக்­க­ளிடம் கைய­ளிக்க ஆவன செய்ய வேண்டும்.

மேலும் வடக்கில் நிலை­கொண்­டுள்ள இரா­ணு­வத்­தினர் அப்­பி­ர­தே­சங்­களில் இன்­னமும் தமது கைங்­க­ரி­யங்­களை அதி­க­ரித்­துக்­கொள்ளும் முயற்­சி­யி­லேயே உள்­ளனர். அதனை அங்­கீ­க­ரிக்க முடி­யாது. மேலும் அண்­மை­யில்­கூட இரா­ணு­வத்­தி­னரால் கிளி­நொச்­சியில் பௌத்த விகா­ரை­யொன்று அமைக்­கப்­பட்­டுள்­ளது. அநு­ரா­த­புரம் மகா­போ­தி­யி­லி­ருந்து வெள்ளரசு மரக்­கி­ளை­யொன்­றையும் கொண்டுசென்று அங்கு நாட்டியுள்ளனர்.

அதுமாத்திரமன்றி கரையோரப்பகுதியிலும் கடற்படை யினர் பௌத்த விகாரைகள் அமைக்கும் பயணியினை மேற்கொண்டு வருகின்றனர். பௌத்தமதம் புனித மான மதமாகும். எனினும், தமிழ் மக்கள் செறிந்து வாழும் வடபகுதியில் பௌத்த விகாரைகள் அமைக் கப்பபடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
« PREV
NEXT »

No comments