Latest News

March 10, 2016

நாம் மர­ணிப்­ப­தற்குள் தயவு செய்து பிள்­ளை­களை கண்ணில் காட்­டுங்கள்
by admin - 0

கதறும் கொழும்பில் கடத்­தப்­பட்ட 5 மாண­வர்­களின் பெற்றோர் 

நாம் மர­ணிப்­ப­தற்குள் எமது பிள்­ளை­களை கண்ணில் காட்­டுங்கள். எமக்­கான இறுதிக் கிரி­யை­களை செய்ய வேனும் அவர்­களை எம்­மிடம் மீள ஒப்­ப­டை­யுங்கள்.

நாம் எல்­லா­வற்­றையும் இழந்­து­விட்டோம். இனி இழப்­ப­தற்கு எதுவும் இல்லை. எந்த குற்­றமும் செய்­யாத எமது பிள்­ளைகள் எங்கு இருக்­கின்­றார்கள் என்­றேனும் கூறுங்கள். ஏன் எமக்­கான நீதியை பெற்றுத் தர தாம­திக்­கின்­றீர்கள். 8 வரு­டங்­க­ளாக பொலிஸ் நிலை­யங்கள், நீதி­மன்­றங்கள், கோயில்கள் என நாம் செல்­லாத இட­மில்லை. தயவு செய்து எமது பிள்­ளை­களை கண்ணில் காட்­டுங்கள்' என கொழும்பு மற்றும் அதனை அண்­டிய பகு­தி­களில் கடத்­தப்­பட்ட 5 மாண­வர்­களின் பெற்றோர் கண்ணீர் மல்க நேற்று கத­றினர்.

கோட்டை புகை­யி­ரத நிலையம் முன்­பாக குறித்த பெற்­றோரும், குறித்த ஐந்து மாண­வர்­க­ளுடன் சேர்ந்து கடத்­தப்­பட்ட மேலும் அறு­வரின் உற­வி­னர்­களும் நேற்று அமைதி எதிர்ப்பு ஆர்ப்­பாட்டம் ஒன்­றினை மேற்­கொண்­டனர். இதன் போதே அவர்கள் ஊட­கங்­க­ளிடம் மேற்­கண்­ட­வாறு கதறி அழுத வண்ணம் கருத்து தெரி­வித்­தனர்.
கடந்த 2008.09.17 அன்று இரவு தெஹி­வளை, பெர்­னாண்டோ மாவத்­தையில் வைத்து ரஜீவ நாக­நாதன், பிரதீப் விஸ்­வ­நாதன், தில­கேஷ்­வரம் ராம­லிங்கம், மொஹம்மட் நிலான், மொஹம்மட் சாஜித் ஆகிய மாண­வர்­களும் , கொட்­டாஞ்­சே­னையைச் சேர்ந்த கஸ்­தூரி ஆரச்­சி­லாகே ஜோன் ரீட், மன்னார் அரிப்பு பிர­தே­சத்தைச் சேர்ந்த அமலன் லியோன், ரொஷான் லியோன், கொட்­டாஞ்­சே­னையைச் சேர்ந்த அன்­டனி கஸ்­தூரி ஆரச்சி, திரு­கோ­ண­ம­லையைச் சேர்ந்த கன­க­ராஜா ஜெகன், தெஹி­வ­ளையைச் சேர்ந்த மொஹம்மட் அலி அன்வர் ஆகிய 11 பேர் கடற்­ப­டையின் கடத்தல் குழு­வொன்­றினால் கடத்­தப்­பட்­டுள்­ளனர். கடத்­தப்­பட்ட குறித்த 11 பேரும் வெலி­சறை, கோட்டை மற்றும் திரு­கோ­ண­மலை கன்சைட் நிலத்­தடி ரக­சிய முகாம் ஆகிய கடற்­ப­டையின் கட்­டுப்­பாட்டு முகாம்­களில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்­துள்­ள­மையும் பல­ரிடம் விடு­தலை தொடர்பில் கப்பம் கோரப்­பட்­டுள்­ள­மையும் விசா­ர­ணையில் உறு­தி­யா­கி­யுள்­ளது.

இந் நிலை­யி­லேயே கடந்த 8 வரு­டங்­க­ளாக தமது பிள்­ளைகள் மீண்டும் திரும்­புவர் என காத்­தி­ருந்த பெற்­றோரும் உற­வி­னர்­களும் நேற்று முதன் முத­லாக அமைதி ஆர்ப்­பாட்டம் ஒன்­றினை முன்­னெ­டுத்­தனர். நேற்­றைய தினம் கோட்டை நீதிவான் நீதி­மன்றில் இது குறித்த வழக்கு விசா­ர­ணை­களும் இருந்த நிலை­யி­லேயே, வழக்கின் பின்னர் பிற்­பகல் 1.00 மணி­ய­ளவில் பெற்றோர் குறித்த ஆர்ப்­பாட்­டத்தை முன்­னெ­டுத்­தனர்.

இதன் போது, குற்­றமே செய்­யாத எமது பிள்­ளைகள் எங்கே?, திரு­கோ­ண­மலை நிலத்­தடி சிறை­களில் இருந்த எமது பிள்­ளைகள் எங்கே? எமக்­கான நீதி எங்கே? போன்ற பதா­தை­களை ஏந்­தி­ய­வாறு இவர்கள் இந்த அமைதி ஆர்ப்­பாட்­டத்தை முன்­னெ­டுத்­தனர்.
இதன் போது குறித்த பெற்­றோரும் உற­வி­னர்­களும் ஊட­கங்­க­ளிடம் கண்ணீர் மல்க தமது சோகங்­களை வெளிப்­ப­டுத்­தினர்.
கொட்­டாஞ்­சே­னையைச் சேர்ந்த, அன்­டனி கஸ்­தூரி ஆரச்சி, கஸ்­தூரி ஆரச்­சி­லாகே ஜோன் ரீட், ஆகிய கடத்­தப்­பட்ட தனது கணவர் மற்றும் மகன் ஆகி­யோரை பறி­கொ­டுத்த தாய் இவ்­வாறு கண்ணீர் மல்க தெரி­வித்தார்.

' எனது கண­வ­னையும் மக­னையும் கடத்திச் சென்று இன்று 8 வரு­டங்கள் ஆகி­றது. 2008 செப்டெம்பர் மாதம் வேனில் பய­ணித்­துக்­கொன்­டி­ருந்த எனது மகன் கடத்­தப்­பட்டார். பின்னர் ஒக்­டோபர் மாதம் வீட்­டுக்கு வந்த அடை­யாளம் தெரி­யாத நபர்கள் அதி­காலை வேளையில் எனது கண­வ­ரையும் கடத்திச் சென்­றனர். அப்­போது சி.ஐ.டி.யில் வந்து மகனை எடுத்துச் செல்­லு­மாறு அவர்கள் கூறினர். அன்று முதல் ஒவ்­வொரு பொலிஸ் நிலை­ய­மா­கவும் நீதி­மன்­றங்கள் ஊடா­கவும் அலைந்து திரி­கின்றேன். இன்னும் எனது மக­னையும் கன­வ­ரையும் காண­வில்லை. குரு­ணாகல் பகு­திக்கு எம்மை அழைத்து மகனை விடு­விக்க கப்­பமும் எம்­மிடம் பெற்­றார்கள். இன்று குற்றம் செய்­த­வர்­களைக் கூட மன்­னிப்­ப­ளித்து விடு­விக்­கின்­றார்கள். சிறையில் உள்­ள­வர்­க­ளுக்­கா­கவும் பலரும் குரல் கொடுக்­கின்­றார்கள். எமக்­காக மட்டும் யாரும் பேசு­வ­தில்லை. 

நல்­லாட்சி அர­சாங்­கமும் எமது விட­யத்தில் அக்­கறை காட்­டு­வ­தாக தெரி­ய­வில்லை. எமது பிள்­ளைகள் என்ன குற்றம் செய்­தார்கள். அவர்­களை எம்­மிடம் மீட்டுத் தாருங்கள் என கண்ணீர் வடித்தார்.

அத்­துடன் 2008.09.17 அன்று இரவு தெஹி­வளை, பெர்­னாண்டோ மாவத்­தையில் வைத்து கடத்­தப்­பட்ட ஐந்து மாண­வர்­களில் ஒரு­வ­ரான கொட்­டாஞ்­சே­னையைச் சேர்ந்த ரஜீவ நாக­நா­தனின் தாயார் இவ்­வாறு கத­று­கிறார்.
' எனக்கு இருப்­பது ஒரே ஒரு பிள்ளை. அவன் லண்­டனில் மருத்­துவம் படிக்கச் செல்ல தயா­ராக இருந்த வேளை­யி­லேயே அவ­னது நண்­பர்­க­ளான பிரதீப் விஸ்­வ­நாதன், தில­கேஷ்­வரம் ராம­லிங்கம், மொஹம்மட் நிலான், மொஹம்மட் சாஜித் ஆகி­யோ­ருடன் சேர்ந்து கடத்­தப்­பட்­டுள்ளார். தயவு செய்து எனது மகனை என்­னிடம் தாருங்கள். அவன் என்ன குற்றம் செய்தான். நாம் மர­ணிப்­ப­தற்குள் எமது பிள்­ளை­களை கண்ணில் காட்­டுங்கள். தயவு செய்து எமது பிள்­ளை­களை எம்­மிடம் ஒப்­ப­டைத்து விடுங்கள். எமது இறுதிக் கிரி­யை­களை செய்ய வேனும் எமது பிள்­ளை­களை எம்­மி­டமே அனுப்பி விடுங்கள்.' என கத­றினார்.
அதே போன்று கடத்­தப்­பட்ட மற்­றொரு மாண­வ­னான மொஹம்மட் சாஜித்தின் தந்­தையும் ஊட­கங்­க­ளிடம் கருத்து தெரி­வித்தார்.
'நாம் கடந்த எட்டு வரு­டங்­க­ளாக எமது
பிள்­ளை­களை தேடிக்­கொண்­டி­ருக்­கின்றோம்.
கடற்­ப­டை­யி­னரே எமது பிள்­ளை­களை கடத்­தினர் என்­பதை நாம் அறிந்­து­கொண்டோம். எனினும் எமது பிள்­ளைகள் எங்கே என்று மட்டும் தெரி­ய­வில்லை.

எமது பிள்­ளை­களை பிடித்துச் செல்ல அவர்கள் என்ன குற்றம் செய்­தார்கள். அவர்கள் குற்றம் செய்­தி­ருந்தால் நீதி­மன்றம் ஊடாக மரண தண்­ட­னை­யேனும் கொடுங்கள். குற்­றமே செய்­யாத அவர்­களை எங்கே அடைத்து வைத்­துள்­ளீர்கள்' என கேள்வி எழுப்­பினார்.

இதன்­போது 5 மாணவர் உள்­ளிட்ட 11 பேர் கடத்தல் விவ­காரம் தொடர்பில் விசாரணை செய்யும் பொலிஸ் அதிகாரிக்கு வேறு விசாரணை நடவடிக்கைகள் காரணமாக தமது விடயத்தில் கவனம் செலுத்த நேரமில்லாது இருப்பதாக தாம் அறிவதாகவும் அது தொடர்பில் நீதிமன்றிலேயே கூறப்பட்ட தாகவும் பெற்றோர்கள் கவலை தெரிவித்தனர். அதனால் தமது விடயம் தொடர் பில் சிறப்பு அதிகாரி ஒருவர் ஊடாக விசா ரணைகளை துரிதப்படுத்தி கடத்தப்பட்ட தமது பிள்ளைகளை மீட்டுத் தாருங்கள் என பெற்றோர் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்தனர்.
« PREV
NEXT »

No comments