Latest News

March 25, 2016

குழந்­தை­க­ளுக்கு பொம்மை கொடுத்து ஏமாற்­று­வது போன்றே 65 ஆயிரம் வீட்­டுத்­திட்ட செயற்­பா­டுகள் வட­மா­காண முத­ல­மைச்சர் கடும் சாடல்
by admin - 0

குழந்­தை­க­ளுக்கு பொம்­மை­களைக் கொடுத்து அவர்­களை ஏமாற்றி அவர்­க­ளிடம் இருக்கும் ஆப­ர­ணங்­களை பறித்­துச்­செல்லும் செயற் பாடுபோன்றே தற்­போது வட­கி­ழக்கில் மேற்கொள்ளப்படவுள்ள 65 ஆயிரம் வீட்­டுத்­திட்ட செயற்­பா­டு­களும் காணப்படுகின்றன என்று வட­மா­காண
முத­ல­மைச்சர் சி.வி. விக்­னேஸ்­வரன் தெரிவித்தார்.

வடமா­காண சபையின் 48ஆவது அமர்வு நேற்­றைய தினம் கைத­டி­யி­லுள்ள வட­மா­காண பேரவை செய­ல­கத்தில் இடம் பெற்­றது. இதன்­போது மீள்­கு­டி­யேற்­ற­அ­மைச்­சினால் யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட குடும்­பங்­க­ளுக்காக முன்னெடுக்கப்படவுள்ள விசே­ட­மான வீட்­டுத்­திட்டத்தில் திருத்­தங்கள் மேற்­கொள்­ளப்­ப­ட­வேண்டும் என்­ப­தான பிரே­ரணை ஒன்று மாகாண சபை உறுப்­பி­னரால் கொண்­டு­வ­ரப்­பட்­டது.
இப்­பி­ரே­ரணை மீதான விவா­தத்­தில் மாகாண முத­ல­மைச்சர் உரை­யாற்­று­கை­யி­லேயே இதனைத் தெரி­வித்தார்.

தொடர்ந்து அங்கு உரை­யாற்­று­கையில் யுத்­தத்தால் பாதிக்­கப்­பட்டு வீடு­களை இழந்து நிற்கின்ற மக்­க­ளிடம் சென்று அவர்­க­ளுக்கு சில­வற்றைக் கொடுத்து அவர்­களை தம் பக்கம் இழுத்து அத­னூ­டாக தாங்கள் நன்மைகளைப் பெற்றுக்கொள்ள சிலர் முயற்சிக்கின்றனர். மீள்­கு­டி­யேற்ற அமைச்­சினால் வடக்கு கிழக்கில் யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட குடும்­பங்­க­ளுக்கு 65 ஆயிரம் வீடு­களை அமைத்­துத்­த­ரப்­போ­வ­தாக தற்­போது கூறு­கின்ற விதத்­தி­லேயே தரு­வ­தாக இருந்தால் அதனை நாம் எதிர்க்­கின்றோம்.

குறிப்­பாக இவ் வீட்­டுத்­திட்­டத்­தில் எங்­க­ளுக்கு எத்­தனை வீடுகள் தேவை எவ்­வா­றான வீடுகள் தேவை என மாகாண அர­சோடு கலந்­து­ரை­யா­டாமல் மத்­திய அர­சாங்கம் தன்னிச்சையாகவே இந்த நட­வ­டிக்­கை­களை எடுத்­துள்­ளது.

இவ்­வா­றானதொரு செயற்­பாடே சற்று காலத்­திற்கு முன்பு பிரதமரினால் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தது. அதா­வது கிராம ராஜ்­ஜியம் என்ற பெயரில் கிரா­மத்­தி­லி­ருந்து 20 பேரை ஓர் குழு­வாக நியமித்து அதனை நேர­டி­யாக தன்­னிடம் வைத்­துக்­கொண்டு மாகாண சபை­களை புறம்­தள்ளி செயற்­பட்­டி­ருந்தார். இந்­நி­லை­யில் இ­தற்கு கடும் எதிர்ப்பை நாம் வெளியிட்­டி­ருந்த அடிப்­ப­டையில் தற்­போது அது தொடர்பில் அலட்டிக் கொள்­வ­தில்லை.

இவ்­வா­றானதொரு செயற்­பாடே தற்­போது பிரஸ்தாப வீட்­டுத்­திட்­டத்­திலும் காணப்­படுகிறது. மாகாண சபை­யுடன் எது­வித கலந்­து­ரை­யா­டலும் மேற்கொள்ளமல் நட­வ­டிக்­கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அத்­துடன் இது முகவர் அர­சி­ய­லா­கவும் மாறி­யுள்­ளது.

இதனை எங்கள் மீது திணிப்­ப­தற்கு ஆயு­த­மாக உங்­க­ளுக்கு வீடு வேண்­டுமா? இல்­லையா என வீடில்­லா­த­வர்­க­ளிடம் கேட்டால் அவர்கள் என்ன சொல்­வார்கள். அதா­வது மத்­திய அர­சாங்­க­மா­னது குழந்­தை­க­ளுக்கு பொம்­மை­களைக் கொடுத்து அவர்­களை ஏமாற்றி அவர்­க­ளி­ட­மி­ருக்கும் ஆப­ர­ணங்­களை பறித்துச் செல்­வதுபோன்று பாதிக்­கப்­பட்­டுள்ள மக்­க­ளிடம் சென்று அவர்­க­ளுக்கு சில­வற்றைக் கொடுத்து அவர்­களை தம் பக்கம் இழுத்து அத­னூ­டாக தாங்கள் நன்­மை­களை பெற முயற்சிக்கின்றார்கள்.

இவ்­வாறு மத்­திய அர­சாங்­கத்தின் நட­வ­டிக்­கை­யா­னது பாரிய தாக்­கங்­க­ளையும் பின்­ன­டை­வு­க­ளையும் எமக்குத் தரும்.

மேலும் தற்­போது அவர்கள் கூறு­வது போன்தான வீட்­டுத்­திட்டம் அமைக்­கப்­ப­டு­மானால் அவ் வீடு­களில் திருத்தம் செய்­ய­வேண்டும் என்றால் அல்­லது அதற்குப் பதி­லான வேறொரு பாகத்தை பொருத்த வேண்டுமானால் என்ன செய்­வது.? யாரிடம் போவது? இது எது­வுமே தெரி­யாது. எதிர்­கா­லத்­தினைக் கரு­தாமல் பணத்­தினைக் கொண்டு செய்­து­விட்டு அதனால் ஏற்­ப­டு­கின்ற பிரச்­சி­னை­களை யார் பார்ப்­பது? இதற்கு யார் முகம் கொடுப்பது.?

மேலும் வடமாகாணத்தில் இதுவரை அமைக்கப்படாத இவ் வீடமைப்புத் திட்டத்தை செயற்படுத்துவதனூடாக சமூகத்தில் பல விதமான பிரிவுகளையும் பிரச்சினைகளையும் கொண்டுவரப்பார்க்கின்றனர். எம்மிடையே பலவிதமான பிரச்சினைகளையும் முரண்பாடுகளையும் ஏற்படுத்தி அதனூடாக பலவிதமான நன்மைகளை மத்திய அரசாங்கம் பெறுவதற்கான செயற்பாடாகவே இது உள்ளது என்றார்.
« PREV
NEXT »

No comments