Latest News

February 20, 2016

காவற்துறை , காணி அதிகாரங்கள் வழங்கப்படுவது அவசியம் இதற்குப் பின்னரும் இழுத்தடித்துக் கொண்டிருக்க முடியாது என்கிறார் டிலான்
by admin - 0

அர­சி­ய­ல­மைப்பின் 13 ஆவது திருத்தச் சட்­டத்தின் ஊடாக வழங்­கப்­பட்­டுள்ள பொலிஸ் மற்றும் காணி அதி­கா­ரங்­களை மாகாண சபை­க­ளுக்கு வழங்­கு­வதன் ஊடா­கவே தமிழ் பேசும் மக்­களின் இனப்­பி­ரச்­சி­னைக்கு நியா­ய­மான அர­சியல் தீர்­வைக்­காண முடியும். புதிய அர­சி­ய­ல­மைப்பின் ஊடாக இதனை உறு­திப்­ப­டுத்­த­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும் என்று சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியின் முக்­கி­யஸ்­தரும் இரா­ஜாங்க அமைச்­ச­ரு­மான டிலான் பெரேரா தெரி­வித் தார்.

மஹிந்த அணி­யினர் புதிய அர­சியல் கட்­சியை ஆரம்­பிக்­கப்­போ­வ­தாக பூச்­சாண்டி காட்­டிக்­கொண்­டி­ருக்­காமல் விரை­வாக ஆரம்­பிக்­க­வேண்டும். நாங்­களும் எமது மைத்­திரி தரப்பை பலப்­ப­டுத்த தயா­ரா­கவே இருக்­கின்றோம் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

அர­சியல் தீர்வு விவ­காரம் மற்றும் புதிய அர­சியல் கட்சி போன்­றன தொடர்­பாக விப­ரிக்­கை­யி­லேயே அமைச்சர் டிலான் பெரேரா மேற்­கண்­ட­வாறு கூறினார்.
அமைச்சர் இந்த விடயம் குறித்து மேலும் குறிப்­பி­டு­கையில்

தேசிய அர­சாங்­கத்­தினால் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்ள புதிய அர­சி­ய­ல­மைப்பு அல்­லது அர­சி­ய­ல­மைப்பு திருத்­தங்­க­ளி­னூ­டாக நாட்டின் தமிழ் பேசும் மக்­களின் தேசிய பிரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வு காணப்­பட வேண்டும். அதா­வது தற்­போ­தைய அர­சி­ய­ல­மைப்பில் காணப்­ப­டு­கின்ற 13 ஆவது திருத்த சட்­டத்தை அடிப்­ப­டை­யாகக் கொண்ட தீர்வு திட்டம் ஒன்று முன்­வைக்­கப்­பட வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.

13 ஆவது திருத்த சட்­டத்­தி­னூ­டாக உறு­தி­ய­ளிக்­கப்­பட்­டுள்ள பொலிஸ் மற்றும் காணி அதி­கா­ரங்கள் மாகா­ணங்­க­ளுக்கு வழங்­கப்­பட வேண்டும் என்ற நிலைப்­பாட்­டி­லேயே நான் இருக்­கின்றேன். இதற்கு பின்­னரும் பொலிஸ் மற்றும் காணி அதி­கா­ரங்­களை வழங்க முடி­யாது என நாம் கூறிக் கொண்­டி­ருப்­பதில் அர்த்தம் இல்லை.

பொலிஸ் அதி­காரம் என்­றதும் ஏன் தென்­னி­லங்கை மக்கள் அச்­சப்­ப­டு­கின்­றனர் என்­பதே புரி­ய­வில்லை. காரணம் பொலிஸார் என்­றதும் ஆயு­தங்­களை எடுத்துக் கொண்டு செல்­ப­வர்கள் என கரு­து­கின்­றனர். ஆனால் அது அப்­ப­டி­யல்ல. பொலிஸார் என்­ப­வர்கள் சமூக பாது­காப்­பையும், மக்­களின் பாது­காப்­பையும் உறு­திப்­ப­டுத்­து­வ­துடன் சட்டம் ஒழுங்கை நிலை­நாட்டும் துறை­யினர் ஆவர். எனவே இவ்­வா­றான பொலிஸ் அதி­கா­ரங்­களை மாகா­ணங்­க­ளுக்கு வழங்­கு­வதில் எந்த பிரச்­சி­னையும் ஏற்­ப­டாது.

பொலிஸ் மற்றும் காணி அதி­கா­ரங்­களை மாகா­ணங்­க­ளுக்கு வழங்­கு­வ­தற்கு புதிய அர­சி­ய­ல­மைப்­பி­னு­டாக நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்டும். இதற்கு பின்­னரும் இந்த விட­யத்தில் தாம­தங்­களை ஏற்­ப­டுத்திக் கொண்­டி­ருக்க கூடாது.
பொலிஸ் அதி­காரம் வழங்­கப்­ப­டு­கி­றது என்­றதும் நாம் அச்­ச­ம­டையக் கூடாது. பொலிஸ் துறை என்­பது சிவில் பாது­காப்பு துறை­யாகும். நான் எனது சிறு வயதில் எனது தந்­தை­யுடன் அக்­கா­லத்தில் பொலிஸ் நிலை­யங்­க­ளுக்கு சென்­றி­ருக்­கின்றேன். அப்­போது பொலிஸ் நிலை­யங்­களில் துப்­பாக்­கிகள் மேலே பெட்­டி­களில் போட்டு பூட்­டி­வைக்­கப்­பட்­டி­ருக்கும். தேவை ஏற்­பட்டால் மட்­டுமே அவை வெ ளியில் எடுக்­கப்­படும்.

எனவே பொலிஸ் அதி­காரம் என்­றதும் சிறு பிள்­ளைகள் பூச்­சாண்­டிக்குப் பயப்­ப­டு­வது போல் நாம் அச்சம் கொள்­வதில் அர்த்தம் இல்லை. எனவே இந்த அதி­கா­ரங்­களை வழங்­கு­வ­தற்கு நாம் இதற்கு பின்­னரும் பின் நிற்க கூடாது.

ஆனால் மாகா­ணங்­க­ளுக்கு காணி மற்றும் பொலிஸ் அதி­கா­ரங்­களை வழங்கும் போது பிரச்­சி­னைகள் ஏற்­ப­டலாம். அதனை இன­வாத சக்­திகள் தடுக்க முற்­ப­டலாம். ஆனால் அவற்றை நாம் எதிர்­கொண்டு சவால்­களை முறி­ய­டித்து பிரச்­சி­னையை தீர்ப்­ப­தற்கு அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்­க­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.

இது இவ்­வா­றி­ருக்க தற்­போது புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­கு­வதா அல்­லது தற்­போ­தைய அர­சி­ய­ல­மைப்பை முழு­மை­யாக திருத்தி அமைப்­பதா என்­பது தொடர்பில் இது வரை தீர்­மா­னிக்­கப்­ப­ட­வில்லை. கலந்­து­ரை­யா­டல்­களின் இறு­தி­யி­லேயே இது தொடர்­பான தீர்­மானம் எடுக்­கப்­படும்.

ஆனால் என்னைப் பொறுத்­த­வ­ரையில் தமிழ் பேசும் மக்­க­ளுக்கு நியா­ய­மான அர­சியல் தீர்வு கிடைக்க வேண்­டு­மாயின் தற்­போ­தைய அர­சியல் அமைப்பை திருத்தி அமைப்­பதே சிறந்­த­தாக அமையும். காரணம் தற்­போது நிறை­வேற்­ற­தி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை­மையில் காணப்­ப­டு­கின்ற சில அதி­கா­ரங்­களை நாங்கள் குறைத்­தி­ருக்­கிறோம்.
எவ்­வா­றெ­னினும் நேர­டி­யான முறையில் மக்­களால் தெரிவு செய்­யப்­ப­டு­கின்ற ஜனா­தி­பதி முறைமை இருந்தால் மட்­டுமே அது தமிழ் பேசும் மக்­க­ளுக்கு சாத­க­மாக இருக்கும். எனவே நிறை­வேற்­ற­தி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறைமை ஒரு சில அதி­கா­ரங்­க­ளுடன் நீடிப்­பது தமிழ் பேசும் மக்­களைப் பொறுத்­த­வ­ரையில் சாத­க­மாக இருக்கும்.

தற்­போது இந்த இனப்­பி்­ரச்­சி­னைக்கு ஒரு அர­சியல் தீர்வை காண்­ப­தற்கு மிக பெரிய சந்­தர்ப்பம் கிடைத்­துள்­ளது. அந்த சந்­தர்ப்­பத்தில் நாங்கள் உச்­ச­பட்­ச­மான பயனைப் பெற்றுக் கொள்ள வேண்­டி­யது மிகவும் அவ­சி­ய­மாகும். குறிப்­பாக இரண்டு பிர­தான கட்­சி­களும் இன்று இணைந்து கருத்­தொ­ரு­மை­வாத தேசிய அர­சாங்­கத்தை உரு­வாக்­கி­யுள்­ளன. எனவே இது போன்ற சந்­தர்ப்பம் இனி கனிந்து வருமா என்­பது சந்­தே­க­மாகும்.

எனவே தற்­போது கிடைத்­தி­ருக்­கின்ற இந்த சந்­தர்ப்­பத்தில் உரிய பயனைப் பெற்றுக் கொள்ள நாம் முயற்­சிக்க வேண்டும். அமெ­ரிக்­காவில் வர­லாற்றில் முதல் தட­வை­யாக கறுப்­பின ஜனா­தி­பதி ஒருவர் பத­விக்கு வந்­தி­ருந்தார். அதே­போன்று இந்­தி­யாவில் மிகவும் சிறு அள­வி­லான சனத்­தொ­கையை கொண்ட ஒருவர் அந் நாட்டின் பிர­த­ம­ராக வந்­தி­ருந்தார். அந்த வகையில் எமது நாட்­டிலும் தற்­போது நல்­லி­ணக்­கத்தை வெ ளிக்­காட்டும் சமிக்­ஞைகள் வெ ளிப்­பட ஆரம்­பித்­துள்­ளன.

தேசிய சுதந்­திர தினத்­தன்று தமிழில் தேசிய கீதத்தை பாடு­வ­தற்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன எடுத்த முடிவு மிக பெரி­ய­தொரு படிக்­கல்­லாக அமைந்­துள்­ளது. இது துணிச்சல் மிக்க முடி­வாகும். இதற்­காக அவரை பூ வைத்து கும்­பி­டலாம். தேசிய கீதம் தமிழில் பாடப்­பட்ட அந்த தரு­ணத்தை பார்த்­த­போது எனது கண்­களை கண்ணீர் துளிகள் பனித்­தன. அது அந்­த­ள­விற்கு உணர்­வு­பூர்­வ­மாண தரு­ண­மாக அமைந்­தது.

எனவே தற்­போது நாட்டில் இன­வாதம் நிரா­க­ரிக்­கப்­பட்டு நல்­லெண்ண செயற்­பா­டுகள் இடம்­பெற்று வரு­கின்­றன. எனவே இனப்­பி­ரச்­சி­னைக்கு நிரந்­தர அர­சியல் தீர்வை காண்­ப­தற்கு இப்­போது தான் சிறந்த சந்­தர்ப்பம் கிடைத்­துள்­ளது. அந்த சந்­தர்ப்­பத்தை நழுவ விடாமல் பயன்­ப­டுத்திக் கொள்ள வேண்­டி­யது எமது பொறுப்­பாகும்.

தமிழ் பேசும் மக்­களின் பிரச்­சி­னை­களை தீர்ப்­பதில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மிகப்­பெ­ரிய வேலைத்­திட்­டத்தை கையில் எடுத்­துள்ளார். தமிழ் பேசும் மக்­களும் எமது நாட்டு மக்கள். அவர்கள் எமது சகோ­த­ரர்கள். எனவே நாம் விரை­வாக காணப்­ப­டு­கின்ற பிரச்­சி­னை­களை தீர்க்க நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். குறிப்­பாக 13 ஆவது திருத்­தத்தின் அடிப்­ப­டை­யி­லான தீர்­வுத்­திட்டம் ஒன்றை முன்­வைப்­ப­தற்கு தற்­போது சிறந்த சந்­தர்ப்பம் கிடைத்­துள்­ளது. அத­னை­விட்­டு­வி­டக்­கூ­டாது.

கேள்வி மஹிந்த தரப்­பினர் புதிய கட்சி ஒன்றை ஆரம்­பிப்­ப­தாக தெரி­வித்­துள்­ள­னரே?
பதில் இன­வாத சக்­திகள் இணைந்து புதிய அர­சியல் கட்­சியை ஆரம்­பிக்­க­வுள்­ள­தாக தெரி­வித்­துள்­ளன. இந்த இன­வாத சக்­தி­களின் கார­ண­மா­கவே மஹிந்த ராஜ­பக்ஷ தோல்­வி­ய­டைந்தார் என்­ப­தனை மறந்­து­வி­டக்­கூ­டாது. எனவே தற்­போதும் இந்த இன­வாத சக்­தி­க­ளுடன் மஹிந்த ராஜ­பக்ஷ இணைந்து கொண்டால் அதற்கு பின்னர் நாம் எத­னையும் கூற முடி­யாது.
அது அவரின் தீர்­மா­ன­மாக இருக்கும். ஆனால் இங்கு ஒரு விட­யத்தை குறிப்­பிட்­டுக்­கூ­ற­வேண்டும். அதா­வது தற்­போ­தைய நிலை­மையில் புதிய கட்­சியை ஆரம்­பிப்­ப­தா­னது ஐக்­கிய தேசிய கட்­சியின் கொந்­த­ராத்தை நிறை­வேற்­று­வ­தா­கவே அமையும் என்­ப­தனை மறந்­து­வி­டக்­கூ­டாது.
ஆனால் கட்­சியை ஆரம்­பிப்­ப­தாக கூறு­கின்­ற­வர்கள் வெறு­மனே பூச்­சாண்டி காட்­டிக்­கொண்­டி­ருக்­காமல் அதனை விரைவில் ஆரம்­பிக்­க­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். ஆனால் ஒரு விட­யத்தை மிகவும் தெ ளிவாக கூறு­கின்றோம்.
அதா­வது இதன் பின்னர் சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சிக்குள் இன­வாதம் இருக்­காது. அதற்கு ஒரு­போதும் இட­ம­ளிக்­க­வு­மாட்டோம். விசே­ட­மாக தற்­போது இன­வாதம் பேசிக்­கொண்­டி­ருக்கும் எவ­ருக்கும் எமது கட்­சியில் இடம் கிடைக்­காது என்­ப­தனை ஞாப­கத்தில் வைத்­துக்­கொள்­ள­வேண்டும்.
கேள்வி தேசிய அர­சாங்­கத்தில் மகிழ்ச்­சி­யுடன் இருக்­கின்­றீர்­களா?
பதில் நாட்டில் நீண்­ட­கா­ல­மாக நிலைத்­தி­ருக்கும் தமிழ் பேசும் மக்­களின் பி்ரச்­சி­னை­களை தீர்ப்­ப­தற்கு தற்­போது சிறந்த சந்­தர்ப்பம் கிடைத்­துள்ள நிலையில் அதற்­காக நாங்கள் எவ்­வா­றான அநீ­தி­யையும் தாங்­கிக்­கொள்­ளவே தயாராக இருக்கின்றோம். இந்த அரசியல் தீர்வு பிரச்சினை இழுத்தடிக்கப்பட்டது போதும். இதற்கு பின்னரும் இதனை நீடிக்கவிடவேண்டாம்.

அடுத்த பாராளுமன்றத்துக்கு இந்தப் பிரச்சினையை கொண்டுசெல்லக்கூடாது. எனவே தற்போதைய காலத்துக்குள்ளேயே இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்தாகவேண்டும். அடுத்த சந்ததியினருக்கு இந்தப் பி்ரச்சினையை விட்டுவைக்கக்கூடாது. அதற்கு கிடைத்துள்ள இந்த சந்தர்ப்பத்தை உரிய முறையில் பயன்படுத்திவிடவேண்டும்.

கேள்வி உள்ளக விசாரணை பொறிமுறை தொடர்பில் ?

பதில் உள்ளக விசாரணை பொறிமுறை தொடர்பில் இனவாத சக்திகள் பல விமர்சனங்களை முன்வைத்து வந்தன. ஆனால் இலங்கை வந்த ஐககிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசேன் நல்லதொரு சமிக்ஞையை வெளிப்படுத்திச் சென்றுள்ளார். மனித உரிமைகள் மீறப்பட்டிருந்தால் நாங்கள் விசாரிப்போம். அதனை எமது அரசியலமைப்புக்கு உட்பட்டு விசாரிப்போம் என்றார்.
« PREV
NEXT »

No comments