துபாயின் சொகுசு ஹோட்டல் ஒன்றில் புத்தாண்டுதினக் கொண்டாட்டங்கள் தொடங்குவதற்கு முன்னர் ஏற்பட்ட தீ இன்னும் முழுமையாக அணைக்கப்படவில்லை
புத்தாண்டு தினத்தை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வான வேடிக்கைகள் தொடங்குவதற்கு முன்பாக இந்த தீ ஏற்பட்டது.
அங்கு குறிப்பிடத்தக்க அளவுக்கு தீ கொழுந்துவிட்டு எரிவதைக் காணக் கூடியதாக உள்ளது என அங்கிருக்கும் பிபிசி செய்தியாளர் ஒருவர் கூறுகிறார்.
எனினும் தீயணைப்புத் துறையினர் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர் எனவும் அவர் கூறுகிறார்.
இதனிடையே திடீரென ஏற்பட்ட இந்தத் தீ குறித்த விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
அட்ரஸ் டவுண்டவன் எனும் 63 மாடிகளைக் கொண்ட அந்த ஹோட்டலின் பக்கவாட்டில் தீ எரிந்தது.
இச்சம்பவத்தில் குறைந்தது 14 பேர் காயமடைந்துள்ளனர்.
No comments
Post a Comment