Latest News

December 27, 2015

மோட்டார் போக்­கு­வ­ரத்து குற்­றங்­க­ளுக்கு வழக்­குகள் இன்றி தண்டப் பணம் அற­விடும் முறை அறி­முகம்
by admin - 0

கிடப்­பி­லுள்ள பெருந்­தொ­கை­யான வழக்­கு­களை துரி­தப்­ப­டுத்தும் வகையில் அடுத்த வருடம் முதல் மோட்டார் போக்­கு­வ­ரத்து தண்­டனைச் சட்­டத்­துடன் தொடர்­புள்ள தவ­று­க­ளுக்கு வழக்கு தொட­ராமல் நேர­டி­யாக தண்­டப்­பணம் அற­விடும் முறை அறி­மு­கப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ள­தாக நீதி அமைச்சு அறி­வித்­துள்­ளது. விசா­ரிக்­கப்­ப­டாமல் இருக்கும் வழக்­கு­களில் மோட்டார் போக்­கு­வ­ரத்­துடன் தொடர்­புள்ள வழக்­கு­களே அதிகம் எனவும் குறிப்­பிட்ட அமைச்­சு, இணக்க சபையில் ஆரா­யப்­படும் வழக்­கு­களின் பெறு­ம­தியை 05 இலட்சம் ரூபா வரை அதி­க­ரிக்­கவும் முடிவு செய்­யப்­பட்­டுள்­ள­தா­கவும் தெரி­வித்­துள்­ளது.

இதே­வேளை, கடந்த 05 வருட காலத்தில் இணக்க சபைக்கு வந்த வழக்­கு­களில் 51 வீத­மா­னவை விசா­ரித்து முடிவு காணப்­பட்­டன.அதன் மொத்த தொகை 03 இலட்­சத்து 75 ஆயி­ர­மாகும். வழக்­கு­களை விசா­ரித்து முடிப்­ப­தற்கு இணக்க சபைகள் பெரும் பங்­க­ளித்து வரு­கின்­றன. இந்த வழக்­குகள் நீதி­மன்­றங்­களில் விசா­ரிக்­கப்­பட்­டி­ருந்தால் வழக்கு விசா­ர­ணைகள் தாம­த­ம­டை­வது இன்னும் அதி­க­ரித்­தி­ருக்கும்.
சிவில் மற்றும் குற்­ற­வியல் வழக்கு சட்டக் கோவை­களை தற்­கா­லத்­திற்கு உகந்தவாறு மாற்ற வேண்டும். இதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியிருக்கிறது என்று நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக் ஷ தெரிவித்துள்ளார் .



« PREV
NEXT »

No comments