சமூக வலைத்தளமான பேஸ்புக் கணக்கொன்றை ஆரம்பிப்பதற்கு உரிய வயதெல்லையொன்றை நிர்ணயிப்பது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாகத் தெரியவருகிறது.
பேஸ்புக் வலைத்தளத்தினூடாக பாடசாலை மாணவர்கள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படும் சம்பவங்கள் அண்மைக்காலத்தில் அதிகரித்துள்ளதாக தரவுகள் பதிவாகியுள்ளன. குறித்த துஷ்பிரயோகங்களைக் கட்டுப்படுத்துவதற்காகவே வயதெல்லை கொண்டுவரப்படவுள்ளது.
இது தொடர்பிலான பேச்சுவார்த்தை சம்பந்தப்பட்ட தரப்பினருடன் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் தெரிய வருகிறது. இதேவேளை ஐரோப்பிய நாடுகளில் பேஸ்புக் கணக்கொன்றை ஆரம்பிப்பதற்கு 13 ஆக இருந்த வயதெல்லை 16 ஆக உயர்த்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் பேஸ்புக் வலையமைப்பின் மூலம் சிறுவர்கள் அதிகளவில் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படுவதாகக் குறிப்பிட்டு பேஸ்புக் வலையமைப்பை தடைசெய்வதற்கான பேச்சுவார்ததைகளும் கடந்த காலங்களில் இடம்பெற்றது.
எனினும் தற்போது பாடசாலை மாணவர்களின் பேஸ்புக் பயன்பாட்டை குறைத்து சிறுவர் துஷ்பிரயோகங்களைத் தவிர்ப்பதற்கு வயதெல்லையொன்றை கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. சட்டத்துறை , வலைத்தள தொழிநுட்பப்பிரிவு மற்றும் துறைசார்ந்தோர்களுக்கிடையில் வயதெல்லை வரையறை பற்றிய சட்ட ஏற்பாடுகள் தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
No comments
Post a Comment