சிறிலங்காவின் சிறைகளில் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி லண்டனில் கவனயீர்ப்பு போராட்டமொனறினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஒருங்கு செய்துள்ளது.
தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகளை போர்க்கைதிகளாக அங்கீகரித்து, அவர்களது பாதுகாப்பினையும் விடுதலையினை உறுதிப்படுத்துமாறு அனைத்துலக சமூகத்தினை கோரும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், இது தொடர்பில் அனைத்துலக மட்டத்தில் தபால் அட்டைப் பரப்புரையொன்றினையும் மேற்கொண்டு வருகின்றது.
இந்நிலையில பிரித்தானிய பிரதமர் அலுவலகத்தின் 10 DOWNING STREET, WESTMINISTER,LONDON, SW1A 2AAமுன் வரும் 20-12_2015 ஞாயிறன்று கவனயீர்ப்பு போரட்டமொன்று ஒருங்கு செய்யப்பட்டுள்ளதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஊடகம் மற்றும் பொது விவகாரங்களுக்கான அமைச்சு அறிவித்துள்ளது.
காலை 11 மணி முதல் மாலை 7 மணி வரை இக்கவனயீர்ப்பு போராட்டம் ஒருங்கு செய்யப்பட்டுள்ளது.
"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்"
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்
பிரித்தானியா
மேலதிக தொடர்பிற்கு
07588470943, 07920787576
07801227038, 07929349302
No comments
Post a Comment