ஹொங்கொங்கில் நேற்று நிறைவு பெற்ற 9ஆவது ஆசிய கனிஷ்ட வலை
பந்தாட்ட வல்லவர் போட்டிகளில் சம்பியனான இலங்கை, பொட்ஸ்வானாவில் 2017இல் நடைபெறவுள்ள உலக கனிஷ்ட வலைப்பந்தாட்ட வல்லவர் போட்டிகளில் விளையாட தகுதிபெற்றது.
நடப்பு சம்பியன் மலேசியாவுக்கு எதிராக நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் 53 – 48 என்ற கோல் கள் கணக்கில் வெற்றி பெற்ற இலங்கை, ஆசிய
கனிஷ்ட வலைப்பந்தாட்ட சம்பியன் பட்டத்தை இரண்டாவது தடவையாக சுவீகரித்துக்கொண்டது. மூன்று தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற கிண்ணப் பிரிவுக்கான லீக் சுற்றிலும் மலேசியாவை இலங்கை வெற்றிகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னர் 2002இல் ஆசிய கனிஷ்ட வலைப்பந்தாட்ட சம்பியன் பட்டத்தை இலங்கை வென்றிருந்தது.
மேலும் இந்த சுற்றுப் போட்டியில் தோல்வி அடையாத ஒரே அணி என்ற பெருமையையும் இலங்கை பெற்றுக்கொண்டது.
No comments
Post a Comment