தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் நிலவும் முரண்பாடுகள் களையப்படும் என வட மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக கட்சி தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொழும்பு தலைவர்களுக்கும் யாழ்ப்பாணத் தலைவர்களுக்கும் இடையில் கொள்கை அடிப்படையிலான முரண்பாடுகள் நிலவி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு இடங்களிலிருந்தும் தமிழர் பிரச்சினை வௌ;வேறு விதமாக நோக்கப்படுகி;றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறெனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சியில் நிலவி வரும் உள் முரண்பாடுகள் விரைவில் களையப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
பேச்சுவார்த்தைகளின் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
தாம் சட்டக் கல்லூரியில் கற்பித்த காலத்தில் சுமந்திரன் சட்டக் கல்லூரி மாணவராக பயின்றவர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
முரண்பாடுகளைக் களைந்து அனைத்து தரப்பினரும் இணைந்து கட்சியின் ஐக்கியத்திற்காக செயற்பாடுவார்கள் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
No comments
Post a Comment