ஜெனீவாவில் வருடா வருடம் குற்றவாளிக் கூண்டில் நின்று பதிலளிக்கும் நிலைமையை மாற்றி ஜனவரி 8 ஆம் திகதி அமைதிப் புரட்சியை ஏற்படுத்தி இன்று சர்வதேசத்தின் ஆதரவைப் பெறும் நாடாக இலங்கையை மாற்றிய பெருமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கே சேரும் என முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
யுத்தத்தை வென்றும் சமாதானம் ஏற்படாது மத வன்முறை தலைதூக்கியிருந்த நாடு இன்றைய நல்லாட்சியில் அமைதிப் பூங்காவாக மாறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பில் அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய போதே அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேற்கண்டவாறு கூறினார்.
அமைச்சர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிந்தது. ஆனால் எம்மிடமிருந்து மத ஒற்றுமை கை நழுவிப் போனது. கடந்த 2010, 2011, 2012 ஆம் ஆண்டுகளில் தொடர்ச்சியாக நாட்டில் தினமும் எங்கேயாவது ஓரிடத்தில் மதங்களுக்கு எதிரான வன்முறைகள் பதிவாகிக் கொண்டேயிருந்தன. சர்வதேசத்தின் மத்தியில் இலங்கை ஓரங்கட்டப்பட்ட நாடாகியது. ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவில் எமக்கு எதிராக பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டன.
இவ்வாறான சூழ்நிலையிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான தேசிய அரசாங்கம் ஏற்படுத்தப்பட்டு நல்லாட்சி உருவானது.
இன்று நாட்டில் உண்மையான சமாதானம் ஏற்பட்டுள்ளதோடு ஐ.நா. குற்றவாளிக் கூண்டில் ஏற வேண்டிய நிலையும் இல்லாமல் போனது. சர்வதேசம் எமக்கு ஆதரவு வழங்குகிறது. வெளிநாட்டு நிபுணர்கள் நாட்டுக்கு வந்து செல்கின்றனர்.
அத்தோடு தகவல் அறியும் சட்டமூலம் விரைவில் பாராளுமன்றத்தில்
முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்படவுள் ளது. இதன்மூலம் ஊழல் மோசடிகளை முற்றாக ஒழிக்கலாம். நிறைவேற்று அதிகார மும் ஒழிக்கப்படவுள்ளது. ஜனநாயகம் நிலைநிறுத்தப்படும் என்றார்.
No comments
Post a Comment