கொழும்பில் HNDA மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தை கண்டித்து யாழ். உயர் தொழில்நுட்ப கல்லூரி உயர் தேசிய கணக்கீட்டு நெறி மாணவர்களினால் இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது .
இதன்போது ,மாணவர்கள் மீதான தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாகவும் மாணவர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் வன்முறைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
மேலும் ‘சுதந்திரமான கல்வி எங்கே’ ‘நல்லாட்சி எங்கே’ போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை தாங்கியவாறு இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொண்டிருந்தனர்.
இதேவேளை கொழும்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது அனைத்து உயர் தேசிய கணக்கீட்டு டிப்ளோமா பாடநெறியை பயிலும் மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.
மட்டக்களப்பு – தாளம்குடா உயர் தொழில்நுட்பவியல் கல்லூரி மாணவர்களினால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கொழும்பில் பொலிஸார் மாணவர்கள் மீது மேற்கொண்ட தாக்குதலை கண்டித்து கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர்.
HNDA மாணவர்கள் தாக்கப்பட்டத்தை கண்டித்து திருகோணமலை உயர் தேசிய டிப்ளோமா மாணவர்களும் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருகோணமலை மணிக்கூட்டு கோபுரத்தின் முன்பாக ஆரம்பமான பேரணி மாகாணசபை வளாகம் ஊடாக சென்று ஆளுனர் அலுவலகம் வரை சென்றது.
No comments
Post a Comment