Latest News

November 01, 2015

பாடுமீன் விருது 2015 -விருது பெற்ற மாணவர்கள் விபரம்
by admin - 0

மட்டக்களப்பு மாவட்டத்தில் கோட்ட மட்டத்தில் புலமைப் பரிட்சையில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற மாணவர்களுக்கு பாடுமீன் விருது வழங்கப்பட்டது இந்த நிகழ்வு மட்/மகாஜன கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது
இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக கல்விப் பணிப்பாளர் திரு K.பாஸ்கரன் ,வலயக் கல்விப் பணிப்பாளர், திருமதி N.புள்ளநாயகம், உதவி வலய கல்விப் பணிப்பாளர் திரு S.சோமசுந்தரம் , அதிபர்களான திரு K. சுப்ரமணியம், திரு புஸ்பராஜா மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள், சமுக நலன் விரும்பிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.


பாடுமீன் விருது பெற்ற மாணவர்களின் பெயர் விபரம்
1.    P.தஹ்ஷினியா (மட்/ வின்சென்ட் பெண்கள் தேசிய பாடசாலை)
2.    V.ஆஷ்திகா (ஆரையம்பதி நவரத்னராஜா பாடசாலை)
3.    J.ஹனுகா (ஆறுமுகத்தான் குடியிருப்பு கலைமகள் வித்தியாலயம்)
4.    S.அஸ்வினி (கரவெட்டி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை)
5.    V.திவேநிஹ்கா (அம்பிளாந்துறை கலைமகள் வித்தியாலயம்)
6.    S.தனுஷா (மண்முனை மேற்கு றுகம் சரஸ்வதி வித்தியாலயம்)
7.    T.ரெணுஜா (வந்தாறுமூலை விஷ்ணு மகா வித்தியாலயம்)
8.    J.கர்ஜிதன் (பேத்தாழை சந்திரகாந்தன் வித்தியாலயம்)
9.    S.மோபிதன் (தேற்றாத்தீவு மகா வித்தியாலயம்)
10.    V.ரபிக்ஷனி (மண்டூர்  இராம கிருஷ்ண மிசன் கலவன் பாடசாலை)
11.    J.வேணுஜா (கதிரவெளி விக்னேஸ்வரா கனிஷ்ட வித்தியாலயம்)
இவ் மாணவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது
இது இவ்வாண்டிலிருந்து தொடர்ச்சியாக வழங்கப்படுமென்று பிரான்ஸ் பாடுமீன் அமைப்பு தெரிவித்துள்ளது, அத்துடன் விருது பெறும் மாணவர்களின் படம் தாங்கிய பெரிய பதாதை ஒன்றும் மட்டக்களப்பு நுழைவாயிலில் நிரந்தரமாக வைக்கப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது










« PREV
NEXT »

No comments