ஹட்டன் – டிக்கோயாவில் பாத்போட் தோட்டத்தில் நேற்று (02) ஏற்பட்ட மண்சரிவில் 5 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன.
டிக்கோயா பகுதியில் தொடரும் மழை காரணமாக டிக்கோயா பாத்போட் தோட்டத்தில் நேற்று (02) இரவு மண்சரிவு ஏற்பட்டிருந்தது.
இதன் காரணமாக வீடுகளுக்குள் நீர் புகுந்துள்ளதுடன் 5 வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளன.
குறித்த பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக 5 குடும்பங்களைச் சேர்ந்த 27 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கபட்ட 5 குடும்பங்களை சேர்ந்தவர்களும் பாத்போட் தேவாலயத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியார் தெரிவித்தார்.
No comments
Post a Comment