Latest News

October 18, 2015

சித்த ஆயுர்வேதம் பாரம்பரியம் மிக்கது வடமாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரட்ணம்
by admin - 0



சித்த ஆயுர்­வேத வைத்­தி­யத்­து­றையை முன்­னேற்­று­வ­தற்கு இலங்கை _ இந்­திய நாடு­களின் உத­வி­களைப் பெற்­றுக்­கொள்ள வடக்கு மாகாண சபை ஊடாக நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என வடக்கு மாகாண சபை உறுப்­பினர் விந்தன் கன­க­ரட்ணம் தெரி­வித்­துள்ளார்.
வட­இ­லங்கை சுதேச வைத்­திய சபையின் ஏற்­பாட்டில் சுன்­னா­கத்தில் இயங்­கி­வரும் லங்கா சித்த ஆயுர்­வேத வைத்­திய கல்­லூ­ரியில் நடை­பெற்ற கலந்­து­ரை­யா­ட­லின்­போதே அவர் இதனைத் தெரி­வித்தார்.
kavinthan


இது தொடர்பில் அவர் மேலும் தெரி­விக்­கையில்,

சித்த ஆயுர்­வேத மருத்­துவம் பாரம்­ப­ரி­யம்­மிக்க வைத்­தியம், அரசர் காலத்தில் பரம்­பரை பரம்­ப­ரை­யாக வந்­த­தாகும். இது தமி­ழர்­க­ளு­டை­ய­தாக உள்­ளது. இந்­தி­யாவில் தலை­சி­றந்த வைத்­தி­ய­மாக இன்றும் உள்­ளது.

 இன்­றைய விஞ்­ஞான, தொழில்நுட்ப வளர்ச்சி கார­ண­மாக சமூ­கத்தின் போக்கும் அத்­த­கைய நிலையில் உள்­ளதால் சித்த ஆயுர்­வேத வைத்­தி­யமும் அதன் ஆர்­வமும் குறைந்து செல்­கி­றது. சித்­த­ ஆயுர் வேத வைத்­தியம் நீண்ட ஆயுளும் மகத்­து­வமும் மிக்க ஒன்­றா­கவே உள்­ளது. இத்­த­கைய வைத்­தி­யத்தை நாம் அனை­வரும் ஒன்­றி­ணைந்து வளர்க்­க­வேண்டும்.


தற்­போது லிங்கா சித்த ஆயுர்­வேத வைத்­திய கல்­லூ­ரிக்குப் பல்­வேறு தேவைகள் காணப்­ப­டு­கி­ன்றன. இங்­குள்ள விரி­வு­ரை­யா­ளர்கள், மாண­வர்­க­ளுக்­கான வசதி வாய்ப்­புக்கள் மற்றும் கல்­லூ­ரிக்­கான சொந்தக் கட்­ட­ட வச­திகள், ஆள­ணிகள் தேவை தொடர்பில் இந்­திய அர­சு­டனும் மற்றும் இலங்கை மத்­திய அர­சு­டனும் பேச்சு-வார்த்தையில் ஈடுபடமுடியும். இத-ற்கான நடவடிக்கையை வடமாகாண சபை மற்றும் முதலமைச்சரூடாக செய்வ-தற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
« PREV
NEXT »

No comments