ஐ.நா விசாரணை அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கலப்பு சிறப்பு நீதிமன்றம் இலங்கையில் ஏற்படுத்தப்படக் கூடாதென தெரிவித்து, நாடாளுமன்றில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷமிட்டு வருகின்றனர்.
நாடாளுமன்றம் இன்று பிற்பகல் 1.30 மணியளவில் கூடிய நிலையில், அங்கு பதாதைகளுடன் வந்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், நாடாளுமன்றத்தில் அமைதியின்மையை ஏற்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில் சபை நடவவடிக்கைகளை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பதாக, பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால அறிவித்துள்ளார்.
No comments
Post a Comment