Latest News

October 23, 2015

பரபரப்பான ஆட்டத்தில் முல்லைத்தீவு செம்மலை உதயசூரியன் அணியை வெற்றி பெற்று வடமராட்சி வதிரி டயமன்ஸ் அணி அடுத்த சுற்றுப்போட்டிக்கு தகுதி
by admin - 0

மாலுசந்தி மைக்கல் விளையாட்டுக் கழகத்தினால் நடத்தப்பட்டு வரும் வடமாகாண அணிகளுக்கு இடையிலான 7 வீரர்கள் பங்குபற்றும் உதைபந்தாட்டத் தொடரில் நேற்று முன்தினம் இடம் பெற்ற ஆட்டத்தில் செம்மலை அணியை போராடி வீழ்த்தியது டயமன்ஸ்.

fooball

ஆட்டத்தின் ஆரம்பத்தில் செம்மலையின் ஆதிக்கமே மிகுந்திருந்தது. அந்த அணியினர் 4ஆவது நிமிடத்திலும், 6ஆவது நிமிடத்திலும் அடுத்தடுத்து இரு கோல்களைப்போட ஆட்டம் கண்டது டயமன்ஸ். நீண்ட போராட் டத்தின் பின்னர் 23ஆவது நிமிடத்தில் டயமன்ஸின் கோல் கணக்கை ஆரம்பித்து வைத்தார் துசிகரன். அந்தக் கோலே முதல் பாதியின் இறுதிக் கோலுமாக 2:1 என்ற கோல் கணக்கில் முடிவுக்கு வந்தது முதல் பாதி.

இரண்டாம் பாதியின் 7ஆவது நிமிடத்தில் மற்றொரு கோலைப்போட்டுச் சமன் செய்தது டயமன்ஸ். டயமன்ஸின் சார்பாக துசிகரன் ஒரு கோலை அடிப்பதும், செம்மலையின் சார்பாக மோகன்ராஜ் பதில் கோலை அடிப்பதுமாக ஆட்டம் சென்று கொண்டிருந்தது. இருப்பினும் துசிகரன் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அடிக்கொரு தடவை தனது அணியின் கோல் கணக்கை உயர்த்திக் கொண்டிருந்தார். முடிவில் 6:5 என்ற கோல் கணக்கில் டயமன்ஸ் அணி வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. டயமன்ஸ் சார்பாக 6 கோல்களையும் துசிகரனே பதிவுசெய்தார். செம்மலை சார்பாக மோகன்ராஜ் 4 கோல்களைப் பதிவுசெய்தார்.
« PREV
NEXT »

No comments