Latest News

October 16, 2015

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி ஒருமித்தமக்கள் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு ரவிகரன் அழைப்பு விடுத்துள்ளார்.
by admin - 0

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி ஒருமித்தமக்கள் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு ரவிகரன் அழைப்பு விடுத்துள்ளார். 
நாடு முழுவதிலுமுள்ள சிறைச்சாலைகளில் தமிழ் அரசியல் கைதிகள் சாகும் வரையிலான உண்ணாவிரதப்போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றார்கள். அவர்களின் போராட்டத்திற்கு மதிப்பளித்தும் அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்படலை வலியுறுத்தியும் மேற்படி கவனயீர்ப்பு நடவடிக்கையானது முல்லைத்தீவில் மேற்கொள்ளப்படவிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார். 
எதிர்வரும் 2015-10-19ம் நாள் திங்கட்கிழமை காலை 9.30 மணியளவில் முல்லைத்தீவு கச்சேரிக்கு முன்பாக நடைபெறவிருக்கும் இக்கவனயீர்ப்பு முன்னெடுப்பில் அரசியல் கைதிகளின் குடும்பங்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் , அரசியல் தலைவர்கள், அனைத்து சமயத்தலைவர்கள், கல்விச்சமூகத்தினர், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு இக்கவனயீர்ப்பு முன்னெடுப்பை வலுப்பெறச்செய்யவேண்டும் எனவும் ரவிகரன் அவர்கள் தெரிவித்துள்ளார்
« PREV
NEXT »

No comments