Latest News

October 15, 2015

முதலாம் திகதியிலிருந்து யாசகம் கேட்பதற்கு தடை
by admin - 0

எதிர்வரும் நவம்பர் மாதம் 1ஆம் திகதி தொடக்கம் பிரதான ரயில் நிலையங்கள் மற்றும் உப ரயில் நிலையங்களில் யாசகம் கேட்பது தடை செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்கள போக்குவரத்து அதிகாரி விஜய சமரசிங்க தெரிவித்துள்ளார். 

ரயில் மற்றும் ரயில் நிலையங்களில் பிச்சை கேட்பது, பாடல் பாடி பணம் கேட்பது உட்பட அனைத்து வகையான யாசகம் கேட்கும் நடவடிக்கைகளும் இவ்வாறு தடைசெய்யப்படவுள்ளது.

பயணிகள் வழங்கிய முறைப்பாட்டையடுத்தே இம்முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்கள போக்குவரத்து அதிகாரி விஜய சமரசிங்க மேலும் தெரிவித்துள்ளார். 
vivasayi

« PREV
NEXT »

No comments