Latest News

October 25, 2015

ஐ.எஸ்.தீவிரவாத குழுவுக்காக நிதி திரட்டிய பிரித்தானியர் கைது: பொறி வைத்து பிடித்த பொலிசார்!
by Unknown - 0

பிரித்தானியாவில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்காக பொதுமக்களிடம் இருந்து நிதி திரட்டிய நபரை பொலிசார் பொறி வைத்து பிடித்துள்ளனர்.

லண்டனின் வடக்கு பகுதியில் குடியிருந்து வரும் Adam Locksley என்பவரை ஐ.எஸ்.அமைப்புக்கு நிதி திரட்டிய விவகாரத்தில் பொலிசார் விசாரித்து வருகின்றனர்.

லண்டனில் பிளம்பராக பணி புரிந்து வரும் இவர் ஐ.எஸ்.அமைப்பின் அனுதாபிகளில் ஒருவர் என கருதப்படுகிறது.

Supermarket Jihadi என அறியப்படும் Omar Hussain என்பவர் குறித்த விவரங்கள் திரட்டும் பொருட்டு போலி முகவரியுடன் நாளேடு ஒன்று அவரை தொடர்பு கொண்டுள்ளது.

அப்போது அவரது கோரிக்கையை ஏற்று ஐ.எஸ்.அமைப்புக்கு நிதி வழங்கவும் தயார் என தெரிவித்துள்ளது.

இந்நிலையில் Omar Hussain குறிப்பிட்டபடி வடக்கு லண்டனில் உள்ள ஒரு கட்டுமான பொருட்கள் சேமிக்கும் கிடங்கில் பணத்தை வைத்து விட்டு சென்றுள்ளனர்.

இதனிடையே பணத்தை சேகரிக்க அப்பகுதிக்கு வந்த Adam Locksley, ஐ.எஸ். அனுதாபிகளை சிக்கவைக்க நடத்தப்படும் நாடகம் என அறியாமல் பணம் இருந்த பையை கைப்பற்றியுள்ளார்.

இது அனைத்தும் ஆதாரமாக சேகரித்த அந்த நாளேடு உடனடியாக தீவிரவாத எதிர்ப்பு பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து ஆதம் என்பவரை கைது செய்த போலிசார் அவரது குடியிருப்பையும் தீவிரமாக சோதனையிட்டுள்ளனர்.

மேலும் அவர் குறித்த கூடுதல் தகவல்களை பொலிசார் சேகரித்து வருவதாகவும் அவரது குடியிருப்பில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களை பரிசோதனை செய்து வருவதாகவும் தேசிய பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
« PREV
NEXT »

No comments