Latest News

October 09, 2015

இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெண்களை நடுவீதியில் நிர்வாணமாக்கி பொலிசார் செய்யும் கொடுமை இது
by admin - 0

இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் சாதி குறைந்த பெண்களை நடுவீதியில் நிர்வாணமாக்கி பொலிசார் செய்யும் கொடுமை இது…!

இந்தியாவை உலுக்கி எடுக்கும் சம்பவம் இதோ…

மோடி அரசு என்னதான் செய்கிறதாம்….? எனும் மனித உரிமை ஆர்வலர்கள்…. வயதுக்கு வந்தவர்கள் மட்டும்…

மனங்கெட்ட இந்தியா ஒரு வல்லரசு நாடாம்….!

எதில் வல்லரசு….???

தனது வலிமையைப் பயன்படுத்தி ஏழைகளின் வயிற்றில் அடிப்பதில் வல்லரசா???

அதே ஏழைகளுக்கு மட்டுமே இந்தியாவின் சட்டங்கள் சொந்தமெனவும்… பணக்காரனுக்கும், அரசியல்வாதிகளுக்கும் சட்டங்கள் அவர்களது வீட்டுப் படுக்கையறை!!! என்ற வகையிலும் அப்பாவி ஏழைகளை மட்டுமே வலிமையான சட்டத்தால் தண்டிப்பதில் வல்லரசா???

(இப்படி நிறையக் கேட்டுக் கொண்டே போகலாம்… இதில் இடம் போதாது)

ஒரு அரசியல்வாதியின் மானமும்… ஒரு பணக்கார உயர்ந்த ஜாதியைச் சேர்ந்தவனின் மானமும் தெனாவெட்டில் போனால்… அது ஒட்டுமொத்த இந்தியாவின் மானம் போனதாக கண்டனம் தெரிவித்து கதறியழும்…

அதே இந்தியாவில்…

பல காட்டுமிராண்டி காவல்துறையினரே… வேலியே பயிரை மேய்வது போல்… பொது இடத்தில், பல பொதுமக்கள் முன்னிலையில் நீதி கேட்ட இரண்டு அப்பாவிப் பெண்களையும் இரண்டு ஆண்களையும் “சாதியில் குறைந்தவர்கள்” என்பதனால் வீதியோரத்தில் அடித்துத் துன்புறுத்தி ஆடைகளைக் கிழித்து நிர்வாணமாக்கி தனது வலிமையைக் காட்டியதில் வல்லராசா???

எதடா வல்லரசு???

பணக்கார அரசியல்வாதியின் மானம் போனால்… பாரத தேவியின் சேலை அவிழ்ந்து விட்டதாக ஓப்பாரி வைக்கும் ஓநாய்களே..!!!

ஒரு தெருவோரத்தில் இரண்டு பெண்களை அடித்துத் துன்புறுத்தி ஆடைகளைக் களைய முற்படுகையில் ஒட்டு மொத்த பெண்களின் மானமும் போகுதே என ஒப்பாரி வைத்துக் கதறி, அவர்களின் கணவர்கள் தடுத்த போது அவர்களையும் நிர்வாணமாக்கி… அந்த அப்பாவிப் பெண்களையும் நிர்வாணமாக்கி… ஒரு திரைப்படம் போல தெருவில் உள்ள அனைவரையும் பார்க்கச் செய்ததுதான் வல்லரசா?

■ அந்தப் பிஞ்சுக் குழந்தைகளை நெஞ்சோரத்தில் வைத்து தனது மானத்தைக் காப்பாற்ற முயற்சித்தபடி ஒரு பக்கம்… மானப் போராட்டம்!!!

■ மற்றைய பெண்ணின் மானத்தைக் காக்கவென காட்டுமிராண்டி காவல்துறையோடு சண்டை போட்டபடி இன்னொரு பக்கம்… காவல் போராட்டம்!!!

■ தனது கணவனை மானங்கெட்ட காவல்துறை அடித்துத் துன்புறுத்துவதை தடுத்து நிறுத்த மற்றொரு பக்கம்… விடுதலைப் போராட்டம்!!!

■ கதறி அழுகின்ற தனது பிஞ்சுக் குழந்தை மேல் கொடூர காவல்துறையின் ஒரு அடி கூட விழாமல் காக்க அடுத்த பக்கம்… காப்புப் போராட்டம்!!!

இவ்வாறு எத்தனை போராட்டங்களை நடுத்தெருவில் நாற்பது பேர் முன்னால் அந்தப் பெண் நரக வேதனையோடு துடிதுடித்து சந்தித்திருப்பாள்!???

இதே நிலை… இந்தக் காணொளியைப் பார்க்கும் இன்னொரு பெண்ணிற்கு ஏற்பட்டால்… அந்த வலி கலந்த ரண வேதனை… அந்த மனநிலை எப்படி இருக்கும் என்பதற்காகவே எனது முகநூலில் பதிவிட்டேன்!!!

உடனே பலர் வரிந்து கட்டிக் கொண்டு வருவார்கள்… இவ்வாறான காணொளிகளை பதிவு செய்யாதீர்கள் என….

அட மனங்கெட்ட மந்தைகளே..!!

இவ்வாறு இந்தக் காணொளியை பலர் பதிவு செய்தால்தான் ஒரு வாரத்திற்குள் பல இலட்ச மக்களைச் சென்றடையும்… பல அமைப்புக்கள் வீதியில் இறங்கிப் போராடும். அதனால், அழுத்தங்கள் அதிகமாகி அந்தக் காட்டுமிராண்டிக் காவல்துறையினர் தண்டிக்கப்படுவார்கள்.!!

இவ்வாறு யாருமே போராடவில்லையென்றால்….

நாளை… பாதிக்கப்பட்ட கணவன் சம்மந்தப்பட்ட காவல்துறையை பழி வாங்கத் துடிப்பான்!!

அந்தக் குழந்தைகள் வளர்ந்து வருகின்ற சூழலில் எந்தக் காவல்துறையினரைப் பார்த்தாலும் கொலை வெறியோடு தாக்குவான்..!!

இவ்வாறான மன்னிக்க முடியாத அதிகார வர்க்கத்தின் மாபெரும் தவறுகளால் பல குற்றவாளிகள் உருவாக்கப்படுகிறார்கள்!!! இதுதான் உண்மை!!!

இன்றைய இந்தியாவில் இவ்வாறான வெளிவராத பல குற்றங்களால் பாதிக்கப்பட்ட பல அப்பாவி மக்கள் இன்றும் குற்றவாளிகளாக பல ஆண்டுகளாக சிறையில் வாழ்ந்து வருகின்றனர்.!!

உலக நாடுகளில், பல சந்தர்ப்ப சூழல்களால் குற்றவாளிகள் உருவாகிறார்கள்!! ஆனால், இந்தியாவில் மட்டுமே அதிகார வர்க்கத்தின் நீதியற்ற அராஜகப் போக்கினால் பல அப்பாவி ஏழைமக்கள் குற்றவாளிகளாக உருவாக்கப்படுகிறார்கள்!!

இனியும் இதே போன்ற சம்பவம் நிகழாமல் இருக்க வேண்டுமெனில் சம்மந்தப்பட்ட காவல்துறையினர் அனைவரையும் அதே இடத்தில் வைத்து தூக்கில் போட வேண்டும்!!

அவ்வாறு செய்தால்….

■ எந்தக் காவல்துறையும் இவ்வாறு செய்யத் துணியமாட்டான்!!

■ சாதிகள் பார்ப்பதும் படிப்படியாகக் குறைய சந்தர்ப்பங்கள் உண்டு!!!

■ இன்னும் பல குற்றங்கள் தானகக் குறையும்.

சம்மந்தப்பட்ட காவல்துறையினர் தண்டிக்கப்படவில்லை என்றால்…

எனது கருத்து கீழ்க்கண்டவாறு இருக்கும்….

“பாரத மதா, சேலை அவிழ்த்துப் போட்டு தெருவோரத்தில் நிர்வாணமகாக் கிடக்கிறாள்.!!! படுக்கைக்கு வர விரும்பும் நாடுகள், வரிசையாக வந்து படுக்கலாம்.

ஆனால், ஒரு நிபந்தனை…

தெருவோரத்தில் அனைத்துவித சூடு சொரணையற்ற மக்களும் பார்வைக்காக நிறுத்தப்படுவார்கள்”

வல்வை அகலினியன்






« PREV
NEXT »

No comments